புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ரஜனி அன்ரன்

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே ! கவி…ரஜனி அன்ரன் (B.A) 08.06.2023

மொழியின் மூலம் எழுத்தே
எழுத்தின் வித்தே மொழிக்கு ஆதாரம்
இலக்கினை நோக்கிய பயணமதில்
எழுத்தோடு பூத்தது முதல்ஒலி
எழிலோடு பதித்தது தடம்
எழுத்தினை விதைத்து வித்தினைப் பதித்து
விருட்சமாகி விழுதுகள் தாங்கி
விசாலமாகி பூத்துக் குலுங்குது தமிழ் !

பாமுகத் தோப்பு பலரது இணைப்பு
இளையவர் தொகுப்பு
இனிமைத் தமிழின் தொடுப்பு
இணைய வழியும் கைகொடுப்பு
இதனால் பல்கிப் பெருகியதே படைப்பு
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழ் !

புலத்திலே பூத்தது எழுத்திலே முதல்ஒலி
பாரெல்லாம் ஒளிருது பாமுக ஒலிஒளி
புலத்திலே தனித்துவம் எழுத்திலே மகத்துவம்
படைப்புக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிரகம்
அர்ப்பணிப்போ ஆயிரமாயிரம்
ஆக்கங்களின் உருவாக்கமோ பல்லாயிரம்
அத்தனையும் பதியங்கள் ஆகா இதுவல்லோ அதிசயம்
எழுத்திலே பூத்திட்ட எழிலான காவியம் !

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading