புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
ரஜனி அன்ரன்
கல்லறைவீரர் கனவிதுவோ…..! கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.11.2023
விடியல் கனவினை விழிகளில் ஏந்தி
தாயகக் கனவினை நெஞ்சினில் சுமந்து
இலக்கினை நோக்கிய இலட்சியக் கனவோடு
செங்களமாடி வெஞ்சமர் புரிந்த வீரமறவர்களே
உம் கனவும் நினைவும் தாயகக் காதலே !
உரிமையை வெல்ல ஒற்றுமையைப் பலமாக்க
உலகே வியந்துநிற்க உயிர்த்தியாகம் செய்த உன்னதரே
தியாகத்திலும் தியாகம் அல்லவா உங்கள் தியாகம்
தேகத்தை ஈகம் செய்த தேசமறவர்களே
கல்லறைத் தொட்டிலில் தூங்கிடும் தூயவரே
உங்கள் கனவும் நினைவும் தாயகக் காதலே !
தடைகளைப் பொடியாக்கி உடலை வெடியாக்கி
வீரத்தை துணிவாக்கி வேகத்தை வலுவாக்கி
தணியாத மண்தாகம் குறையாத தமிழ்மோகம்
உரமான உரிமையென உம்கனவுகளோ கோடி
கோடி கனவுகளைச் சுமந்தபடி – நீவிரும்
குழிகளிலே தூங்குகின்றீர் தவிப்போடு – இன்னமும்
ஒட்டுமொத்த எம்மினமும் ஒற்றுமையுமில்லை
ஒருமைப்பாடுமில்லை உரிமைகளும் தானுமில்லை
உங்கள் இலட்சியக் கனவுகளும் கானல் நீராச்சே !
