ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.03.24
கவி இலக்கம் -139
மாறுமோ மோகம்

மாறுமோ மனங்களின் மோகம்
தேறுமோ இனங்களின் தாகம்
ஆறுமோ குதர்க்க சோகம்
சாறு பிழிய சேறு பூசும் வேகம்

நாளும் பொழுதும் நோகடிக்க
வாழ்வும் சாவும் மூழ்கடிக்க
மாளும் பொழுது கல்லறை
கண் திறந்து பேசிடுமா ?

பச்சைப் பாலரும் இச்சைக்கு
இணங்காத மங்கையரும்
செய்த பாவம் என்ன ?
பதில் தான் கூறிடுமா ?

மூச்சை நெரிக்கும் ஒரு
நொடியின் காமுகர் போதை
பாதையில் மாறுமா மோகம் ?

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading