புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.04.2023
ஆக்கம்-98
சுடர்
ஒவ்வொரு மாவீர தினத்தில்
மரணித்த வீரருக்கு ஏற்றுவது
ஈகைச்சுடரே

தன் உயிரைத் தானமாக்கி இன
விடுதலைக்காய் சொட்டு நீர்
ஆகாரமின்றி உயிர் நீத்த தியாகி
திலீபனைப் போற்றுவது தியாகச்சுடரே

மாணவர் பயின்று முன்னேறிட
ஆசரியர் ஆற்றுவது அறிவுச்சுடரே

தம் தேவைக் கனவைச் சுருக்கி
பிள்ளை நனவைப் பெருக்க
மெழுகுவர்த்தியாய் உருக்குவது
தீபச்சுடரே

சுடர் போடும் ஒளித்தீபம்
இடர் படும் போது பாவமே

ஆணவ அக்கிரமச் சூறாவளியில்
சிக்கித் தவித்துச் சுட்டெரித்து
சுக்குநூறாகும் பூமிப் பந்து .

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading