ராணி சம்பந்தர்

12.11.24
ஆக்கம் 166
சூர வதை

அசுரனுக்குப் போதை
இறுமாப்பு
சூரனுக்குப் பாதை துரும்பு
நரகாசுரனுக்கு நரம்பு
வதைவதைப்பு

சூர அரக்கன் இந்திர
ஞாலத் தேர் சுற்றிச்
சிதைத்த கழிப்பு
அகோர அரக்கர்
ராஜபக்ஷர் தந்திரக்
குண்டு விமான இன
வெறி தொற்றி எறிகணை அழிப்பு

சூர வதை கதிர்காம
முனைத்திருப்பு
கோர மமதை வல்லரசுக் கூட்டு
முனைத்திரிப்பு

நன்னீர்க் கடலில்
அங்கு ஆழ்த்திய
சேனைப்படைப்பு
நந்திக் கடலில் இங்கு
அமிழ்த்திய துப்பாக்கி
முனைப்பு

கண்ணீரில் தத்தளித்து
மிதந்த தமிழனில் பதை
பதைத்துப் புதைந்த சூர
வதை தாய் மண்ணின்
நெஞ்சில் சுட்ட ஆறாக்
காயங்களே .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading