“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ராணி சம்பந்தர்

12.11.24
ஆக்கம் 166
சூர வதை

அசுரனுக்குப் போதை
இறுமாப்பு
சூரனுக்குப் பாதை துரும்பு
நரகாசுரனுக்கு நரம்பு
வதைவதைப்பு

சூர அரக்கன் இந்திர
ஞாலத் தேர் சுற்றிச்
சிதைத்த கழிப்பு
அகோர அரக்கர்
ராஜபக்ஷர் தந்திரக்
குண்டு விமான இன
வெறி தொற்றி எறிகணை அழிப்பு

சூர வதை கதிர்காம
முனைத்திருப்பு
கோர மமதை வல்லரசுக் கூட்டு
முனைத்திரிப்பு

நன்னீர்க் கடலில்
அங்கு ஆழ்த்திய
சேனைப்படைப்பு
நந்திக் கடலில் இங்கு
அமிழ்த்திய துப்பாக்கி
முனைப்பு

கண்ணீரில் தத்தளித்து
மிதந்த தமிழனில் பதை
பதைத்துப் புதைந்த சூர
வதை தாய் மண்ணின்
நெஞ்சில் சுட்ட ஆறாக்
காயங்களே .

Nada Mohan
Author: Nada Mohan