தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பெற்றோரே…
பேறுகள் பலவாகி
பெரும்பேறும் வாழ்வாகி
சேய்களின் காப்பாகி
செம்மையுற வாழ்ந்தவர்கள்

செப்புகின்ற பட்டறிவும்
சீராக்கும் வாழ்வறமும்
காப்பரணாய் வேலியிட்டு
காத்திட்ட பெற்றோரே

கடனது பாரியது
காலத்தால் ஈடுசெய்ய முடியாது காத்திடமாய்
கணக்கிறது

ஞாலத்தில் நாம் வாழும்
நல் வாழ்வின் வெற்றியே
உங்களின் பாடுகளின்
உன்னதத்தை வெளிச்சமிடும்

வேராகி விழுதாகி
விருட்சமாய்
தொடர்கின்றோம்
தூரிகையாய் துலங்க வைத்தீர்
பேருவகைப் பேறு பெற்றோம்
பெருமையுடன் வாழ்கின்றோம்
நிதமுமாய் சான்றாகும்
நீங்களிட்ட அறமே
எம்மோடு
அறிவுரையே வாழ்வோடு!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading