புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கல்லறை விழுமியங்கள் ….
போரின் வதை தந்த புறநானூறு
வேரின் விதையிட்ட விழுமியக்கூறு
காலத்தின் கலங்கரையாய் ஞாலத்தின் நாற்றுக்களாய்
ஈழத்தின் இலக்குகள்
இன்னலின் முகவரிகள்

துடுப்பற்ற படகுகளாய்
துண்டிக்கப்பட்டவர்கள்
தாய் தேச வரலாற்றை
தாங்கியே மடிந்தவர்கள்
போர்கால அவலத்தில்
புதையுண்டார் கல்லறையில்

வாசத்து மலர்களே வாடிய பூக்களே
பாசத்துப் பாசறையில் பயின்றிட்ட பாலகரே
நேசத்தில் உறங்கும்
வீரத்துக் காவியர்கள்!

விழுமியத்து விழுதுகள்
ஈழத்து விண்மீன்கள்
காலத்தை கலங்கரையாய் காத்திட்ட மாவீரர்
நாம் வாழ தமையீர்ந்தார்
நன்றிக்கே வித்தனார்
கல்லறைக் கதை கேளு
காவியமே வரலாறு!

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading