புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

வலியதோ முதுமை

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-23

28-03-2024

வலியதோ முதுமை

வலிமை கொண்டவர்க்கு
முதுமையொரு பொக்கிஷ்ம்
வாழ்ந்து சாதித்த இளமையின்
மொத்த அனுபவம்!

சுருக்கங்களிங்கே உலகிற்காய்
உதவிய கரங்கள்
நோக்கங்கள் எதுவுமற்ற
சிறப்பு நியங்கள்!

இறப்பென்பது தலைவிதி
புரிந்த பக்குவம்
இதில் நரையென்பது
முதுமையின் அழகு

ஊருக்கும், உறவிற்கும்
உதவிய பின்
தனக்கென
தானமும் சேர்த்தவர்.

நொந்த நிலையிலும்
நோகாமல் வாழ
வந்து உதவுவோர்க்கு வாரி
வளங்கும் வள்ளலானார்.

வலியதோ முதுமை
வந்தாலும்
மெலியவே போகக்
காண்பீர் இவர் பலம்.

தான, தருமத்தோடு
தனக்கென தக்காத்துவர
பரம்பரையும் உனைக்காத்து வரும்
புகட்டிச் சென்ற பண்பாளன்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

Continue reading