தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

Selvi Nithianandan சங்கதிகேளு 607

வண்டியின் ஓட்டம் வேகமாய் செல்ல
சக்கரத்தின் ஆட்டம் வழுக்கியே போக
இளையவர்கள் கூட்டம் பாதியிலே கவிழ
இழுபறிப் பட்டு நிலத்திலே முடியுது

இடிபோல செய்தி அதிகாலை வந்திட
இரவு தூக்கம் இல்லாது போக
இளவல் நிலை தலைதூக்கி நிற்க
இதயமும் பயத்தால் பதட்டமாய் அடிக்க

நாயும் குறுக்கே தெரிவிலே பாய
சேயும் பிறேக்கை இறுக்கவே பிடிக்க
தேய்து இழுத்து மரத்துடன் மோத
வாயும் முகமும் குருதியில் நனைய

வண்டியும் கீறல் வேகமும் மீறல்
தாயும் சீறல் தட்டிக்கேட்டா மோதல்
கையிலே கட்டு வேணுமாம் நோட்டு
கட்டுப்பாடு இல்லா கரணம் போடுதே.

Nada Mohan
Author: Nada Mohan