Sunrise news

உலகச் செய்திகள்

இலங்கையில், குருநாகல் -வெஹெரவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய எரிவாயு வெடிப்பில், எரிபொருள் நிலையத்தின் முகாமையாளர் உட்பட 4 பேர், தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மகன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்திய ஜனாதிபதி ஒருவர் போர்ச்சுக்கலுக்கு செல்வது 27 ஆண்டுகளில் இது முதன்முறையாகும்.
விசாக்களை வைத்திருக்கும் தனிநபர்கள் வருகிற 13-ந்தேதி வரை சவுதி அரேபியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
தங்கள் நாட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்காக அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகள்
வரி விதிப்பு தொடர்பாக சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக டிரம்ப் கூறியுள்ளார்
மகா கும்பமேளாவின் புனித நீர் வெளிநாட்டிற்கு தேவைப்படுவதை எடுத்துக்காட்டும் வகையில் 1000 போத்தல்களில் மகா கும்பமேளா புனித நீர் ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு சில விசா வழங்கல் நிறுத்தி வைப்பும், புதிய பயணக் கட்டுப்பாடுகளையும் சவுதி அரேபிய அரசாங்கம் விதித்துள்ளது.: இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்தான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா morokko மற்றும் ஏமன்
சுவிஸ் பெண்களில், 18 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 63 சதவிகிதத்தினருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை என ஃபெடரல் புள்ளியியல் அலுவலக தரவுகள் கூறுகின்றன.
காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2ம் திகதி பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை அறிவித்திருந்தார்.
வடகொரியாவில் ஆறு ஆண்டுகளில் பின்னர் முதன் முறையாக வடகொரியா பியோங்யாங்கில் சர்வதேச மரதன் போட்டியை நடத்தியது.
கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் அதன் எல்லைகளை பெருமளவில் மூடியுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் சுமார் 200 வெளிநாட்டு ஓட்டப்பந்தய வீரர்கள் போட்டியில் பங்கெடுத்தனர்.
கனடாவில் சாக்லெட் உட்கொள்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டோனி பண்டக்குறியைக் கொண்ட சோகலோனிலி சாக்லேட்களில் சிறு கற்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரு வகை சாக்லேட்களுக்கு மீளப்பெறல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளிலொன்றான கஜகஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல் என்ற பகுதியில் இந்த அரிய வகை தாது படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதை அந்நாட்டின் தொழில் மற்றும் கட்டுமான அமைச்சகம் உறுதி செய்துள்ளது
45 உக்ரைனிய குடிமக்கள் வெற்றிகரமாக மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.

உக்ரைன் தனது 45 குடிமக்களை ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பிரதேசங்களில் இருந்து வெற்றிகரமாக மீட்டெடுத்து தாயகம் திரும்ப செய்துள்ளது.

மீட்கப்பட்ட இந்த குழுவில், கடுமையான உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய பல உக்ரைனியர்கள் உள்ளனர்.மெட்ரோவினுள் ஒரு போலிப் பயணச்சீட்டுப் பரிசோதகர் (contrôleur) நடவடிக்கையில ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.முக்கியமாக இது பெருநகரமான லியோன் நகரத்தின் மெட்ரோக்களில் நடந்துள்ளது.
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள கழிவு அகற்றும் நிலையம் நேற்று பிற்பகல் தீப்பிடித்து எரிந்தது. மருத்துவக்கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகளை அழிக்கும் குறித்த நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் காற்றில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ooooooooooooooooooooo
5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, 2025 ஐபிஎல் தொடரில், 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

ஏற்கனவே, தோனிக்கு 43 வயதாகி விட்ட நிலையில், இந்த ஐபிஎல் தொடரே அவருக்கு கடைசி 5தொடராக இருக்கும் என பலரும் கருதி வந்தனர்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்கள் அடிக்க, அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் ஹிலால் அணியை வீழ்த்தியது.

கிங்டம் அரேனா மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அல் ஹிலால் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 45+4 நிமிடத்தில் அல் நஸர் வீரர் அலி அல்ஹஸன் அபாரமாக கோல் அடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

Nada Mohan
Author: Nada Mohan