Sunrise news

World News 605

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் சில நிமிடங்களுக்கு முன்பு வெளியேறினார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான விசாரணைகளில் சிஐடியின் நகர்வுகள் வேகமாக அதிகரித்த வருகிறது.
பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியான துயரச் சம்பவம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது
அரபிக்கடலில் இந்திய கடற்படை எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது. இந்த வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.
‘பஹல்காம் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களும் நிச்சயம் தண்டிக்கப்படுவது உறுதி,” என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
டில்லியில் வசிக்கும் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை உளவுத்துறை டில்லி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது.
கடந்த 2 நாட்களில் எல்லைப்பகுதியான அட்டாரி வழியாக, பாகிஸ்தானை சேர்ந்த 272 பேர் வெளியேறி உள்ளனர்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி,காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதனை அடுத்து,பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டங்கலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் வெற்றி உறுதியானதை அடுத்து லிபரல் கட்சி தலைவர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது வைக்கப்படும் அழுத்தத்தை மேலும் அதிகரிப்போம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் இரு வாரங்களில் ரஷ்யா போர்நிறுத்துக்கு உடன்பட வைப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் தெரிவித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு கருத்தையே ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். “அடுத்த எட்டு முதல் பத்து நாட்களில், ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிப்போம்” என அவர் தெரிவித்தார்.புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு (Conclave) நடைபெறும் உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மாநாடு மே 7 ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் (Vatican City) அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, புதிய பாப்பரசரை தேர்தெடுப்பதற்காக கர்தினால்கள் வத்திக்கானில் கூடி வருகின்றனர்.
இந்தநிலையில், குறித்த மாநாடு சிஸ்டைன் தேவாலயத்தில் மே 7 ஆம் திகதி இரகசியமாக நடைபெறவுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு பாப்பரசர் தேர்தலுக்கு 135 கார்டினல்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வான்கூவர் திருவிழா கூட்டத்தின் மீது வாகனத்தை மோதவிட்டு 9 பேர்கள் கொல்லப்பட காரணமான நபர் கூறிய ஒற்றை வார்த்தை தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுடனான வர்த்தக நிறுத்தத்தின் விளைவாக பாகிஸ்தானில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக, பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது போன்ற முக்கிய முடிவுகளும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் அரசு இந்தியாவோடு இருந்த அனைத்து வகையான வணிக உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதி கொந்தளிப்புடன் உள்ளதால் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Nada Mohan
Author: Nada Mohan