World News 601 Selvi Nithianandan 25 03 2025

அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி வந்த டக்ளஸ் தற்போது அந்த முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் வெளிநாடு ஒன்றிலிருந்து தாயகத்திற்கு வந்து உடல்களை நீதிமன்ற அனுமதிபெற்று மீள தோண்டி எடுக்கப்பட்டு மார்ச் 23ம் திகதி சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன.
1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி மேற்கொண்ட படை நடவடிக்கைகயில், கண்டி வீதியில் உள்ள வீடொன்றில் இருந்த தாயும் அவரது மகனும் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டுவளவிலேயே அடக்கம் செய்துள்ளார்.
பிரிட்டன் விதித்திருக்கும் தடையால் தனது அரசியலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) தெரிவித்தார்.
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. போராட்டம், சட்ட நடவடிக்கை என வேகம் காட்டிய முதல்வர், தற்போது தமிழக எம்.பி.,க்களை அழைத்து சென்று, பிரதமரை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.
கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
ஆபிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில் தென்மேற்கு ஆபிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
சென் கத்தரின்ஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து போலீசார் கொலை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மூளையில் பொருத்தப்பட்ட சிப் உதவியுடன், மனதில் நினைப்பதாலே சில செயல்களை இளைஞர் செய்து வருகிறார்.
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், நியூராலிங்க்(Neuralink) எனப்படும் நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.
மனித எண்ணங்களை செயல்களாக மாற்றக்கூடிய மூளை மற்றும் கணினிக்கு இடைமுகமாக செயல்படக்கூடிய மைக்ரோ சிப்பை (Brain-Computer interface) உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகிறது.
உக்ரைனின் துல்லிய தாக்குதலில் ரஷ்ய ஹெலிகாப்டர்கள் சுக்குநூறாக சிதைந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மெட்டா நிறுவனம், இங்கிலாந்தில் விளம்பரமில்லா சந்தா முறையை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருகிறது.
பிரான்ஸ் தலைநகரில் கார் இல்லாத மண்டலத்தை உருவாக்க வாக்களிப்பு நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், சிறையில் அடைக்கப்படும் பணக்கார கைதிகள், தங்களால் ஏற்படும் செலவுக்கு தாங்களே பணம் செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் சொத்து என்கின்றது ஜேர்மனி. ஆம், வெளிநாட்டு மாணவர்கள் ஜேர்மனிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயை உருவாக்குகிறார்கள்.
மார்ச் 27 ஆம் திகதி வியாழக்கிழமை பரிசில் ஐரோப்பிய பாதுகாப்பு உச்சிமாநாடு இடம்பெற உள்ளமை அறிந்ததே. இதில் பங்கேற்க யுக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி ஒரு நாள் முன்னதாக நாளை பரிசுக்கு வருகிறார்.
முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் (76) காலமானார்.
மார்ச் 21, 2025, வெள்ளிக்கிழமை, குடும்பத்தினருடன் அமைதியாக உறங்கிக்கொண்டே அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
1968 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அவர், 1973ல் ஜோ ஃப்ரேசியரை வீழ்த்தி தனது முதல் உலக ஹெவிவெயிட் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆனால், 1974ல் நிகழ்ந்த “Rumble In The Jungle” என்ற சரித்திரப்புகழ் பெற்ற போட்டியில் முகம்மது அலிக்கு எதிராக தோல்வி அடைந்தார்.
1994-ல் 45 வயதில் மைக்கேல் மூரரை வீழ்த்தி, உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார். இதன் மூலம், உலகின் வயதான ஹெவிவெயிட் சாம்பியனாக புதிய சாதனை படைத்தார்.
பாக்சிங் உலகமே அவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்துள்ளது. மைக் டைசன், ஜேக் பால், NBA நாயகன் மேஜிக் ஜான்சன் உள்ளிட்ட பிரபலங்கள் அவரை புகழ்ந்தனர்.
முகம்மது அலியின் பேரன் நிக்கோ அலி வால்ஷ் “கடைசியாக இருந்த தெய்வீக வீரர்களில் ஒருவர் சென்றுவிட்டார்” என்று தெரிவித்தார்.
எலிசே மாளிகையில் வைத்து மக்ரோன் – செலன்ஸ்கி இருவரும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது யுக்ரேனுக்கான தேவைகள் குறித்து செலன்ஸ்கி மக்ரோனுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது
ஐபிஎல் தொடரின் 3வது நாளான நேற்று, ஆந்திரா மாநில விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி, பெங்களூரு வீரர் விராட் கோஹ்லி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
விராட் கோஹ்லி நடப்பு ஐபிஎல் தொடரில் 4 அணிகளுக்கு எதிராக 1000 ஓட்டங்கள் குவித்த ஒரே வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
ஆரம்ப காலம் முதல் கோஹ்லி ஆதரவு அளித்து வரும் தோனி, தற்போது தங்கள் இருவருக்குமான உறவு குறித்து பேசியுள்ளார்.