கெங்கா ஸ்ரான்லி

சாந்தி

ஆன்மீகம் தரும்
மனதுக்கு சாந்தி.
மனம் அமைதி பெற்றால்
சாந்தி பெறும் உள்ளம்.

இறந்தவர் ஆன்மா
இறைபதம் அடைய
ஈகை செய்தல்
சாந்தி தரும்.

முதியோர் இல்லமதில்
முதுமைப் பெற்றாரை
முடக்கிய மகனுக்கு
ஏது மனச் சாந்தி.

தன்னலமற்ற சேவை
தருமே சாந்தி.
சுய நலமுள்ள வருக்கு
கெடுமே சாந்தி.

மெளனமாக இருந்தால்
மனம் அடையும் சாந்தி.
குறள் வழி ஒழுகினால்
குமூகமே அடையும் சாந்தி.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading