16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 19-01-2023
ஆக்கம் – 43
பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது
கருவறையில் கருக்கொண்டு
கருவினிலே உருக்கொண்டு
பெற்றவள் பெற்றிடும் வலிமையில்
எட்டி உதைத்தே உலகை
எட்டிப்பார்க்கும்
வலியோடு அன்னையும்
வலிமையில் குழந்தையும்
கருவறையில் தொடங்கி
கருவிழி மூடும்வரை
போராட்ட வாழ்க்கையில்
தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
மிகவலிமை பெற்றிடல் வேண்டும்
மானிடம் மாண்புடன் வாழ்வதற்கு
பெண்களை போற்றிடல் வேண்டும்
பெருகிடும் வலிமை பெற்றுயர்ந்து
ஆணுக்கு பெண் சரிநிகர் சமநிலை எய்தல்வேண்டும்
நூற்றாண்டுகள் கடந்தும்
வல்லாதிக்க கோடூர ஆட்சிகளின்
அடக்கு முறைகுள் வாழும் மக்களின்
உடல்வலிமையும் உளவலிமையும்
உயர்ந்திடல் வேண்டும்
உரிமைகள் யாவும் பெற்று
உலகை வென்றிடல் வேண்டும்
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
15-01-2023

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...