கனடா பொதுத்தேர்தலில் போட்டியிடும் நான்கு இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்

2025ஆம் ஆண்டுக்கான, கனடாவின் 45ஆவது ஃபெடரல் பொதுத்தேர்தல், இம்மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியினர் நான்குபேர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் நான்கு பேருமே, இந்தியாவின் குஜராத் மாநில பின்னணிகொண்ட முதலாம் தலைமுறை புலம்பெயர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஜயேஷ் ப்ரம்பத், சஞ்சிவ் ராவல், அஷோக் பட்டேல் மற்றும் மினேஷ் பட்டேல் என்னும் நான்கு பேர்தான் அந்த வேட்பாளர்கள்.