முதுமை

ராணி சம்பந்தர்

முதுமையை எதிர்பாராத இளமை
பதுமையாகக் காலமெனும் படகில்
ஏறிக் கரைசேர முடியாது தவித்தது

புதுமையை எதிர்பார்த்த உரிமை
வலிமையாக மனமெனும் துடுப்பில்
மென்மையாக வலித்திடினும் தைரிய
இன்மையால் ஆடியாடிப் பரிதவித்தது

தனிமை எனும் பேரலைகள் மோதிடவே
நோய் எனும் பெரு சூறாவளியும் தாவிட
வாயிருந்தும் பற்களின்றி வியர்த்திட

பசி இருந்துமே உண்ணாது உறக்கம்
விழிக்க ருசி தெரியா நாக்கும் , மூசி
அடிக்கும் மூக்கும் , துடிக்கும் இதயமும்
பேச்சு மூச்சின்றியே பெருந்துணை
இளமை நினைவோடு மூச்சும்
அடங்கிப் போனதே ஆதரவின்றி .

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading