” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முதுமை

ராணி சம்பந்தர்

முதுமையை எதிர்பாராத இளமை
பதுமையாகக் காலமெனும் படகில்
ஏறிக் கரைசேர முடியாது தவித்தது

புதுமையை எதிர்பார்த்த உரிமை
வலிமையாக மனமெனும் துடுப்பில்
மென்மையாக வலித்திடினும் தைரிய
இன்மையால் ஆடியாடிப் பரிதவித்தது

தனிமை எனும் பேரலைகள் மோதிடவே
நோய் எனும் பெரு சூறாவளியும் தாவிட
வாயிருந்தும் பற்களின்றி வியர்த்திட

பசி இருந்துமே உண்ணாது உறக்கம்
விழிக்க ருசி தெரியா நாக்கும் , மூசி
அடிக்கும் மூக்கும் , துடிக்கும் இதயமும்
பேச்சு மூச்சின்றியே பெருந்துணை
இளமை நினைவோடு மூச்சும்
அடங்கிப் போனதே ஆதரவின்றி .

Nada Mohan
Author: Nada Mohan