“நட்பென்றாலே”

நேவிஸ் பிலிப் கவி இல(640)

அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும் இல்லை
வளர்பிறை போலாகி ஒளியாய்
முழு மதியாய் வளரும் நட்பு

ஆடை குலையும் நிலை காண
கரம் விரைந்து செயலாற்றுதல் போல
துன்பம் விளையும் வேளையிலே
விரைந்தோடி இன்னல் தீர்க்கும் நட்பு

பண்பு நலனும் அன்பு நயமுமாய்
புனித உணர்வாய் புதிய உறவாய்
மனதினால் அடை காத்து
மலர்ந்திருக்கும் இனிய நட்பு

மகிழ்ச்சித் தருணங்களில் கூடி
கொண்டாடிக் களிப்புற மட்டுமல்ல
நெறி தவறி தடுமாறும் வேளையிலே
உணர்த்தித் திருத்தி இறுதிவரை
உடனிருக்கும் தூய நட்பு.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading