இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பேராசை 115

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026

மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள் தேடி
கண்ணெதிர் அழிவைக் கண்டாயோ?

காற்றைப் பையில் அடைப்பதற்கு
கனவு காண்பது சாத்தியமா?
அளவோடு பகிரும் நல்மனமே
வளமோடு வாழத்தரும் அருளே

ஆசையை அடக்கக் கற்றுக்கொள் -இந்த
அகிலமே உனக்குச் சொந்தமாகும்
பேராசை விலங்கை உடைத்தால்,
பேரின்ப வாழ்க்கை வசந்தமாகும்.

இயற்கை கொடையை இரசித்து -நீ
இன்பத்தைக் காணக் கற்றுக்கொள்,
இல்லையேல் பேராசைக் காட்டுத்தீயில்
இறுதிவரை ஆயுளை எரித்துக்கொள்.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading