நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே…. 30.07.2026

எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில் ஒளியாய் நிற்கும் தூய்மை
கருணை மழையைப் பொழியும் காருண்ணியம்
வாழ்வின் இறுதிவரை தொடரும் பயணம் நட்பு !

சிலுவையைப்போல சுமப்பது நட்பு
நிலுவை இல்லா நிஜம்நட்பு
தேவையின் போது தோளிற்சாய
துன்பத்தின்போது கண்ணீர் துடைக்க
மகிழ்ச்சி வெள்ளத்தில் மனம்விட்டுப்பேச
வேண்டும் என்றும் தூயநட்பு !

வாழ்வியல் பயணத்தில் எத்தனையோ மனிதர்கள்
வந்துபோவார் வெறும்அலைகளாய்
தூயநட்பு மட்டுமே நிலையாய் நிற்கும்
நெஞ்சக்கரையில் நிரந்தரப் பாறையாய்
உலகேஎதிர்த்தாலும் நான் இருக்கிறேனென்று
நம்பிக்கைதரும் ஒற்றைச்சொல்லே
ஆயுள்வரைக்கும் தொடரும் நட்பு !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading