நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கலவரம்

சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும் சமுதாயப் புரட்சிகள் ஏனோ
வாழும் காலமதில் வளர்பிறை போன்றே

மூளும் பகைகள் அழியவே வேண்டும்
மூர்க்கமான கொள்கைகள் மாறவே வேண்டும்
தாழ்வுகள் அகன்றே தரமாகவே வேண்டும்
வீழ்ச்சிகள் என்றுமில்லாது சூழ்ச்சியகலவே வேண்டும்

நன்றே புரிவது நயமாக வேண்டும்
ஒன்றே என்றதோர் உள்ளமும் வேண்டும்
வென்று நிற்பதற்கு பகையும் வேண்டாம்
கொன்று குவிக்கும் மடமையும் வேண்டாம்

என்றும் அறிவை அறுக்கவும் வேண்டாம்
ஆசைகளால் அன்புகளைத் துறக்கவும் வேண்டாம்