கலவரம்

சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும் சமுதாயப் புரட்சிகள் ஏனோ
வாழும் காலமதில் வளர்பிறை போன்றே

மூளும் பகைகள் அழியவே வேண்டும்
மூர்க்கமான கொள்கைகள் மாறவே வேண்டும்
தாழ்வுகள் அகன்றே தரமாகவே வேண்டும்
வீழ்ச்சிகள் என்றுமில்லாது சூழ்ச்சியகலவே வேண்டும்

நன்றே புரிவது நயமாக வேண்டும்
ஒன்றே என்றதோர் உள்ளமும் வேண்டும்
வென்று நிற்பதற்கு பகையும் வேண்டாம்
கொன்று குவிக்கும் மடமையும் வேண்டாம்

என்றும் அறிவை அறுக்கவும் வேண்டாம்
ஆசைகளால் அன்புகளைத் துறக்கவும் வேண்டாம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading