பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியமஸ்….தரையிறங்கிய டிராகன் விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கிக்கொண்ட நாசாவின் விண்வெளி வீரர்கள் இறுதியாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
புளோரிடாவின் டல்லாஹஸ்ஸி கடற்கரையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பத்திரமாக தரையிறங்கியுள்ளனர். இவர்களுடன் நாசாவின் நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் உடன் திரும்பியுள்ளனர்.
286 நாட்களுக்கு பிறகு நீண்ட 17 மணி நேரப் பயணத்திற்கு பின்னர் அவர்கள் பூமிக்கு திரும்பி, புதிய பூமிக் காற்றை முதன்முதலில் சுவாசித்தனர். பூமியின் ஈர்ப்பு விசையின் எடை அவர்களின் பலவீனமான உடல்களில் அழுத்தப்பட்டதால், மீட்புக் குழுவினர் அவர்களை ஸ்ட்ரெச்சர்களில் ஏற்றிச் செல்ல உதவினார்கள்.