” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

300வது வாரம், சந்தம் சிந்தும் சந்திப்பு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025

பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய் தோறும் வரவேற்ப்பாய்

பாவை அண்ணனின் திறனாய்வாய்
பலவாய் கவியும் மேம்படுதே
வாரம் தோறும் வளர்கின்றோம்
வேர் போல் ஆசான் தாங்களல்லோ

விடுப்பு எடுத்து சென்றாலும்
தொடுப்பாய் தானும் நின்றிடுவீர்கள்
கடைசி நிமிடத்திலும் ஞாபகத்தொடுப்பாய்
கவிதை புனைய வைப்பவரே

தங்கள் சேவை சிறப்பேயிங்கு
தளம் தந்து ஊக்குவிக்கும் அதிபருக்கும்
தொழிநுட்பத்தோடு எடுத்தாளும் நாயகிக்கும்
சந்தந்தில் சந்திக்கும் மதிமகன் அண்ணாவோடு

தாங்கி விழுதாயிருக்கும் அனைவரையும்
இருகரம் கூப்பிய நன்றியோடு
முன்னூறைத் தொட்ட முகமலர்வோடு
சாதித்த சங்கதியில் நானுமிங்கே

Nada Mohan
Author: Nada Mohan