ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.09.23
கவி இலக்கம்-282
எழுத்தறிவில்லை எனில்

தோன்றிற் புகழோடு தோன்றுக
இதுவோ வள்ளுவன் வாக்கு

படிப்பறிவோடு உலகறிவும் சேர
புகழ் பெற வழி எதுவோ
அது நோக்கு

கற்றோர் சபையில் பலரறிய
உன் குரல் ஓங்கியே ஒலிக்கும்

இல்லையேல் மறைந்து ஒழிய
மனங் கூச பேச்சு வராது நிற்கும்

தீய நெறி சென்று தரங் கெட்டு
குறுக்குவழி புகுந்து தீய
பழக்கவழக்கம் சேர்ந்து
வாழ்வே நரகமாகும்

எழுத்தறிவில்லை எனில்
கடமை அறியாது சரி,பிழை
ஆராயத் தெரியாது தவறுகள்
புரியாது காமம், கோபம்
சொரிய குறிககோள் இல்லாது
வாழுங்காலம் பரிதாபமே
பரிதாபமே .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading