அன்று எங்கள் வீட்டு விசேடங்களுக்கு..…
நாங்கள் வசிக்கும் ஊரிலுள்ள உறவினர், நண்பர்களை நேரில் சந்தித்து கொண்டாட்டம் பற்றி அம்மா அறிவித்தா.
தூர தேச உறவுகளுக்கு அப்பா சென்று அறிவித்து வருவார்.
இன்னும் மற்றைய பகுதிகளிற்கு அண்ணா சென்று அறிவித்து வருவார்.
மேலும் வெளிநாட்டு உறவுகளிற்கு தபால் மூலம் அறிவித்து விடுவோம். வீட்டு வேலைகளை ஊரிலிருக்கும் உறவுகளோடு அம்மா பார்க்க, அப்பா, அண்ணாவும், உறவுகளும் வந்து கலந்து கொண்டார்கள்.
இப்படியாக எனது அக்காவிற்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது..
பெற்றோரே தெய்வம்
அன்று எம் வீட்டில் நடைபெறும் விசேட தினங்களுக்கு
நாம் நேரில் சென்று அழைப்பு சொல்வதே வழக்கம்.
ஒரு வீட்டில் ஆணுக்கு மட்டும் சொல்வதென்றால் அப்பா மட்டும் போவார்.
எல்லோருக்கும் அழைப்பு எனில் பெண்களில் ஒருவரும் செல்ல வேண்டும்.
அழைப்பவர் வீட்டிற்கு சென்று சொன்னால் தான் அவர்கள் வருவார்கள்.
க.வா. என்ற பெயருடன்
சமய, சமூகப் பணிகளை செய்த அப்பா
தன்னைப் போலவே பிள்ளைகளை பொறுப்புடன், ஒழுக்கத்துடன் நற்பண்புடன் வளர வேண்டும் என வழிகாட்டியவர்.
தனித்துவத்துடன் தலைமை தாங்கி நடாத்தும் பண்பு மிக்கவர்.
எடுத்த பொருளை வேலை முடித்து அதே இடத்தில் திரும்ப வைத்தல்,
தேவைக்கு வாங்கிய பொருளை உடனே திருப்பிக்கொடுத்தல்,
மூத்தோர்களை போற்றும் பண்பு போன்ற பலவற்றை
நம் வாழ்வில் தொடர்வதற்கு காரணமானவர்
எம் கண்ட தெய்வம் அப்பாவே.🙏🏽
குடும்பத்தின் நேசிப்பது அதே போல எல்லாரையும் மதித்து நேசிப்பது.
ஏனைய உயிரினங்களையும் நேசிப்பவர்.
உ+ம் செல்லப்பிராணி நாய் பசு கோழி இவற்றுக்கு உணவு கொடுப்பது நோய் வந்தால் கைவைத்தியம் பார்த்து மாத்தி விடுவார். அரையண்டப் படாமல் கையினால் எண்ணெய் போடுவார் எங்களில் ஒருவரை உதவிக்கு அழைப்பார்.
.அதிகாலை எழுந்தால் தேனீர் 4.30 காலை கொடுப்பேன் . ஏதாவது வேர்களை செய்யார் .
இரவில் கார் உதவி கேட்டு வைத்தியசாலைக்கு செல்ல கேட்டால் உடனே செல்வார்.
எனக்கு இரவில் இருமல் இருக்கும் நித்திரை கொள்ளாது வந்து தண்ணீர் மிளகு தருவார் இப்போதும் மறவேன்.
உ+ம் சொல்லி புத்திமதி சொல்வார் கலங்க மாட்டார் அம்மாவுடன் இசைந்து வாழ்ந்தார் இப்பவும் அவர் வாழ்ந்த வீட்டை அவர் பெயரைக் கொண்டு அழைப்பார்கள்.
நானும் அங்கு கந்தையா வின் மகள் என்பதில் மகிழ்ச்சி. வியப்புகள் பற்பல அப்பாக்கள் ஆணிவேர். அவரை எந்த நேரத்திலும் நினைப்பதில் மகிழ்ச்சியும் வாழ்த்துக்கள்.
நன்றி.
பெற்றோருடன் வாழ்ந்த
காலத்தில்
அயலவர், உறவினர் உறவு
பலமானதே…….
எம் வீட்டில் தினம் தினம்
அப்பாவின் நண்பர்கள்
உறவாடுவது வழக்கமே…..
உணவுபரிமாற்றங்கள்
இன்ப துன்ப நிகழ்வுகளில் இணைவு
இயல்பானதே…..
எம் கிராமம் சிறியது
எம் முன் தலைமுறையினர்
ஊரில் உள்ளவர்களையே
திருமணம் செய்வார்கள்.
இதனால்
உறவில்லா உறவினர்கள் என்பது
அப்போ அரிதே…..
எங்களில் 7 பெண்கள். 1 மகன்.
எனக்கும் தங்கைக்கும் ஆண்பிள்ளைகள் பிறந்தது என்று ஆனந்தம் அடைந்திருப்பார். மூத்த மகன் பிறந்து 2 வயதில் அம்மா இறைபதம் அடைந்து விட்டார்.
அவரிடம் பிள்ளைகளை காட்டி மகிழ வைத்திருப்பேன்.
30 வயதில் வெளிநாடு வந்தேன். சுத்த சைவம்.
35 வயதில் மாமிசம் சாப்பிடவேண்டி வந்தது. அப்போது நினைத்தேன் அம்மா சாப்பிட சொல்லும் போது சாப்பிடவில்லை , ஊருக்கு போய் அம்மாவிடம் அசைவம் சாப்பிட வேண்டும் என்று
சந்தோசமாக சாப்பிட்டு இருப்பேன்.
எனது கஷ்டங்களை சொன்னால் அதற்கு விரைவில் நல்ல பதில் சொல்வார்.
இப்போது என்னுடன் இருந்தால் எனக்கு பெரிய நம்பிக்கை ,தோழி,தோழனாக அவர்களை நான் காத்திருப்பேன். உறுதுண யாக இருப்பேன்.
என்றும் என் கண்முன் நினைவுகள் நிழலாடும்.
அப்பாவின் 29வது நினைவுநாள் 25.5.25. அதற்கு முன் கனவில் வருவார்.
பெற்றோரே தெய்வம்,
எம் அம்மா இப்போது இருந்திருந்தால்
சமையல் அறை பக்கம் போகத்தேவையில்லை.
எம் பிள்ளைக்கு பாடல், கதைகள் சொல்லிக்கொடுத்திருப்பார். சிறு நோய் என்றால் கையில் திருநீற்றுடனும் திருமுருகாற்றுப்படை பாடலுடனும் முன் நிற்பார்.
பெற்றோரே தெய்வம்,
எம் அம்மா இப்போது இருந்திருந்தால்
சமையல் அறை பக்கம் போகத்தேவையில்லை.
எம் பிள்ளைக்கு பாடல், கதைகள் சொல்லிக்கொடுத்திருப்பார். சிறு நோய் என்றால் கையில் திருநீற்றுடனும் திருமுருகாற்றுப்படை பாடலுடனும் முன் நிற்பார்.
வெளியில் சென்று வர நேரம் பிந்திவிட்டது என்றால் வாசலில் காவல் நிற்பார்.
எம் குடும்ப விளக்காக
தன் ஒளி முழுவதையும்
பரப்பி எம்மை ஆளாக்கி
பாரினில் மிளிரச்செய்தவர்
எம் அம்மா.
கணக்கில் புலி அவர்
என வகுப்புத் தோழர்
செல்வதை கேட்டிருக்கின்றோம்.
தன் ஆசைகளை அடக்கி
எமக்காக தன்னை தந்தவர்.
எல்லா அம்மாக்களும்
இப்படி தானே என்றால்
எம் அன்னை ஒருபடி மேலே
என்பேன்.
சாப்பாட்டில் கூட
தனக்காக எதனையும்
செய்யாது
எங்களுக்காக செய்தவர்.
அம்மாவிற்கு எமது அஞ்சலி.
ஆனால் எங்களை வளர்பதற்காக மாடுகள் வளர்த்தார். பால் கறந்து விற்பது மாட்டை பராமரிப்பு வேலைகள். குத்தகை காணி பாத்து அதில் தேங்காய் ஓலை கிடுகு பின்னி விற்பது என்று பல முயற்சிகள் செய்து கஸ்ரப் பட்டு ,வளர்த்தார்.
வீட்டில் எல்லோரும் சேர்ந்து வேலைகளை செய்தாலும் அம்மா அந்த அந்த நேரத்தில் அவர் தான் எல்லாம் செய்தார்.
அம்மா பட்ட கஸ்ரங்களை பாத்து அவரிடம் நான் எதனையும் கேக்க மாட்டேன்,
ஆனால் அம்மா எனது தேவையான வற்றை செய்வார்.
அம்மா அம்மா எங்களுக்கு மாத்திரம் அல்ல உதவி என கேட்டவர்களுக்கு தன்னால் ஆன உதவி செய்வார்.
இப்பவும் அம்மா அப்பா வை பற்றி கதைப்பவர்கள் உண்டு. பெற்றோரை
“ஒருநாளும் மறவாதே”
எம் சிறுவயது பருவத்தில்
எங்கோ கடிதக்காரர்
ஊதியின் சத்தம் கேட்டால்
எமக்கு கடிதம் வரும் என எண்ணி படலைக்கு ஓடி போய் காத்து நிற்கும் தருணம் பல.
எங்கள் வீட்டிற்கு தினமும் கடிதம் வருவதுண்டு.
சில தபால்காரர்களை மறக்கமுடியாது ,
வீட்டிற்குள் வந்து கடிதம்
தந்ததும் உண்டு.
காக்கி நிற உடுப்பு ,
வாசலில் சைக்கிள் மணியின் தொடர் ஒலி
இவை
தபால்காரர் வரவை
அறிவுறுத்தும் வெளிப்பாடுகள்.
தினமும் காலையில்
பத்திரிகை கொண்டு வருபவர்
சாந்தி எனக் கூவிக்கொண்டே வருவார்.
உறவுக் கடிதங்கள் எம் உணர்வுடன் சங்கமிப்பவை.
அப்பா கடிதம் எழுதும் விதம் என் கண்ணில் நிழலாடுகிறது. 🙂
எங்கள் ஊர் தபால்காரர் காக்கி நிற 1/2 கால்சட்டை யுகம் அதே நிற சேட் தொப்பியும் அணிந்து சைக்கிளில் வருவார்.
விசில் ஊதும் சத்தம் 200மீற்றர் வரை கேக்கும்.
கேட்டவுடன் விரைவாகச் சென்று வாசலில் நிற்போம்.
சண்டை பிடித்து பறித்து சென்று அம்மாவிடம் கொடுப்பது வழமை.
தந்தி வந்தால் அது துக்க செய்தி என பயப்படுவதும் உண்டு.
பலருக்கு தெய்வமாக இருந்து சில காலத்தில். கனவின் மனைவி வேலைக்காக பிரிந்து இருந்து கடிதம் எழுதுவதும்
எனது கணவர் சவுதியில் வேலை தபால் காரை தினமும் எதிர் பாத்த காலம்.
அம்மா அப்பா வுடன் இருந்த போது வேலைக்கு விண்ணப்பிக்க கடித மூலம் அனுப்பி பதிலை எதிர்பார்த்து காத்திருந்த காலமும் நினைவுகள் தொடரும் .
வெளிநாட்டு வந்து கிழமைக்கு 1கடிதம் எழுதி அம்மா மாமி அனுப்பி விட்டு பதிலை எதிர்பார்த்து நிற்பாராம் அம்மா.
இப்போதும் அவர்களின் கடிதம் என்னிடம் உள்ளது.
நன்றி
நகுலவதி
இனிய காலை வணக்கம் “
“பெற்றோரே தெய்வம்”
சிறுவயதில் அழகழகாய் என்
பாதங்களை அலங்கரித்த
காலணிகள் எத்தனை எத்தனையோ …பிந்திய காலங்களில் அணிந்ததும் வகை வகையாய்….
காலணியில் ஒன்றுதான்
என் பாதத்தை பதம் பார்த்தது
இன்றும் என் வினை தொடர்கிறது. இளம்வயதின்
அனுபவித்தவைகளை இன்றுஅனுபபவிக்க முடிவதில்லை….
🙏அனைவருக்கும் இனிய காலை வணக்கம்🙏
என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
பெற்றோரே தெய்வம்
13-04-2025
ஆரம்பப் பள்ளி செல்லும் பருவங்களில் என் பாதங்களை கறுப்பு சன்ரில்ஸ் அலங்கரிக்கும்.
பாடசாலை சன்ரில்ஸ் என மிகவும் கவனமாக பாதுகாப்பேன். வீட்டிற்கு என வேறு பாட்டா வைத்திருந்த ஞாபகம். அதன் பின்னர் வெள்ளை சப்பாத்து, வெள்ளை சொக்ஸ் எனப் போட்டோம்.
குறுகிய காலத்தில் எல்லாம் மாறிக்கொண்டேயிருந்தது. அப்பா வெள்ளை சப்பாத்து வாங்கித் தந்தவர். அம்மா தான் சன்ரில்ஸ் வேண்டித் தந்தவா.
சிறு வயதில் பாட்டா போட்ட காலத்தில் வெளிநாட்டு உறவுகள் சப்பாத்துடன் வந்திறங்குவார்கள். கால்களில் சொக்ஸை மடித்து விட்டிருப்பார்கள். மிக அழகாக இருக்கும். இன்றும் என் கால்களில் சொக்ஸ் போடும் போது அவர்களும் மெல்ல ஞாபகத்தில் வந்து போவார்கள்.
அழகான காலத்தை மீட்டுத் தந்த பாமுகத்திற்கு என் நன்றிகள்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
சிறிய வயதில் செருப்பும் ,சான்டில் போட்ட ஞாபகம். ஞாபகம் வருதே
இப்போது.
பாடசாலை மாறி போகும் போது அங்கு வெள்ளை சட்டை வெள்ளை, கால்மேல் சப்பாத்து கட்டாயம். சப்பாத்து பொலிஸ் இல்லை. வெள்ளை சோக்கு தான் கைகொடுக்கும். செருப்பும் சிலவேளை போடுவது.
செருப்பு அறுந்து விட்டால் ஆணி அடித்து சென்றதும் முண்டு ஊசி குத்தியும் உண்டு.
எங்கள் ஆரம்ப பள்ளி
பக்கத்தில் என்பதால்
பாட்டா செருப்பணிந்து
நடந்தே செல்வோம்.
அப்பா நால்வருக்கும் ஒரே மாதிரியான
பாட்டாக்களே வாங்கித்தருவார் .
ஆனால்
அப்பா பாட்டா போட்டத்தை பார்த்ததே இல்லை.
வளர வளர செருப்புகளின் வடிவங்கள் மாறின.
அந்த காலத்தில் பாட்டா செருப்பணிவதே
தனி சுகம்.
முன் விறாந்தையால்
வாசல் வழியாக உள் நுழைந்தால் நடைகூடம்
அடுத்து நாற்சார் வடிவில் அகன்று விரிந்த அமைப்பு
பெரியறை(சாமியறை),
சின்ன அறை, சமையல் அறை, முன் அறை என அமைந்த
எங்கள் வசந்தமாளிகை.
தெற்கு வாசல் கதைவைத்திறந்து
நிலத்தில் பாய்போட்டுப்படுத்தால்
தென்றல் காற்று
எம்மை தாலாட்டும்.
சிறு வயதுப் பருவத்தில்
நடைகூடம் மண்ணால்
அமைந்திருந்தது
அம்மா ஈரமான
இலுப்பக்கொட்டை, எள்ளு, புளியம்பழம்
போன்றவற்றை
பாய் விரித்து பரப்பி
காய வைப்பார்.
சுற்றி வர பயன்தரு மரங்கள்
வீட்டை பாதுகாத்தன.
இயற்கையுடன் வாழ்ந்த எங்கள் வீடு என்றும் எம் கோயிலே.!!!!😀
பெத்தாச்சி, அப்பப்பா,ஆச்சி,சித்தப்பா 3வர், மற்றும் 4 மாமிகள் கூட்டுக் குடும்பமாக. 4 வயது வரை. கல்வீடு மண்குசினி விறாந்தை விளையாட மண்முற்றம்.
அப்பா வீடு கட்டி 5வயதில் அங்கு போனோம். வீட்டில் இருந்து கொண்டு வீடு முழுமையாக கட்டி முடிக்க எனக்கு 9 வயது அம்மம்மா அம்மா அப்பாவுடன் அக்கா அண்ணன் தங்கை என்று விளையாடி வாழ்த ,
“கற்பகதரு” வீடு என்நெஞ்சில் நிழலாடுகிறது.
நன்றி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
இனிய காலை வணக்கம்,
பெற்றோரே தெய்வம்
30-03-2025
சிறுவயதில் என் குடும்பத்தில் படுக்கை இடம் சொல்லும் கதை…..
நானும் அண்ணாவும் அம்மா யாரின் பக்கம் திரும்புவா எனப் போட்டி போட அம்மா இருவரின் கையையும் பிடித்து தூங்குவா, நான் முழிக்கும் போது அம்மா அசதியாக அண்ணா பக்கம் திரும்பியிருந்தால், நான் ஒரு மொக்கு பிள்ளை.., எனக்கு நித்திரை வராது. எழும்பியிருப்பேன். அம்மா “படு பிள்ளை” என அணைத்து தூங்கி விடுவோம். சிலவேளை அம்மா சமையலறை வேலையென்றால், நான் அண்ணா, தம்பி படுத்திருப்போம். அண்ணா நிறைய பகிடி சொல்வார். சிரித்துக்கொண்டு தூங்காவிடில், அப்பா படுக்க வைப்பதாக வருவார். ஒரே கதையும், சிரிப்பும் தான்….
சில வேளை அம்மம்மா எங்களுடன் வந்து படுத்தால், எனது தலையணை கொடுப்பேன். தம்பியின் தலையணையில் சேர்ந்து தூங்குவேன். இரவில் தம்பி உருண்டு தலையணை இல்லாமல் உறங்குவார். நான் கவனமாக தலையை தூக்கி வைத்தாலும், உருண்டு போய் விடுவார். ஒரு சந்தோஷ்மான காலம்…ஞாபகமூட்டி கண்ணீர்துளியைத் தந்த பாமுகத்திற்கு நன்றிகள்.
குழந்தை பருவத்தில் இருந்து
வெளிநாடு வரும்வரை
அம்மாவின் படுக்கையில் பங்கெடுப்பவள்.
மரக்கட்டில், பாய்
தலையணை, பெற்சீட்
என்பவை எம் படுக்கையை சுகப்படுத்துவன.
முன் இரவில் தனியே படுத்து
முன் விடியலில்
அம்மாவின் சூட்டில்
தூங்குவேன்.
எங்கள் வீட்டில்
ஆரம்பத்தில் சாணத்தால் மெழுகிய மண் நிலத்தில் படுப்பது
இப்பொழுதும் நினைக்கையில் உடம்பிற்கு இதமாகவே உள்ளது.
சில வேளைகளில் பாயில் படுக்கும் போது
உருண்டு உருண்டு
படுப்பதுவும் உண்டு.
சிறு வயதில் என் குடும்பத்தில்
என் படுக்கை இடம் சொல்லும் கதை என்னவென்றால்…..
எனக்கு என் சிறு வயதில் பெற்சீற் என சொல்லவே வராது…(போர்வை)
பெஸ்சீட் என்று தான் எனக்கு சொல்ல வரும்.
அதே நேரம் அந்த பெஸ்சீட் இல்லாம நான் நித்திரை கொள்ள போகவே மாட்டேன்.
என் உறவுகளில் சிலர் அதை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்வார்கள்.
நான் அதை சரியா சொன்னா தான் தருவம் என்பார்கள்….
என் அம்மாவும் அவர்களுடன் சேர்ந்தே சிரிப்பார்.
அதே நேரம் குடும்ப நிகழ்வுகளில் இரவு நேரத்தில் எல்லோரும் நித்திரைக்கு போனதும் அம்மா அடுப்புக் கரி எடுத்து மாவாக்கி கொஞ்ச தண்ணி விட்டு எல்லோருக்கும் பெரிய மீசை பூசி விடுவதில் அம்மா கெட்டிக்காறி…
எல்லோருக்கும் மீசை வரைந்திட்டு தானும் போய் நித்திரையாகிடுவார்..
பின்பு என்ன
விடிய எழும்பினதும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்புத்தான் இன்றும் என் கண்களில் என் அம்மாவின் சிரிப்பு….
இவற்றை மீண்டுமாய் நினைக்க வைத்ததைக்கு மிக்க நன்றி❤️🙏🏽
நான் இங்கு 1986 வந்து விட்டேன்.இங்கு மகன் பிறந்தார் . பார்க் ஆசப்படார். அம்மாவின் இறப்பு 1989தில் நடை பெற்றது.
எங்களில் 7 பெண்பிள்ளைகள். அக்காவுக்கும் எனக்கும் 3 பெண் குழந்தைகள்.
ஆண்குழந்தை எனக்கு பிறந்தும் அம்மா சந்தோசப் பட்டார்.
1வது பிறந்த நாள் அன்று
அம்மா பேரன் இல்லாமலே பலகாரம் செய்து உறவுகளுக்கு கொடுத்து மகிழ்ந்தார்.
3வயது வரை அப்படி செய்வார். அவர் இறந்தும் இன்று வரை நினைத்து பார்ப்பேன்.
அதுமட்டுமல்ல நானும் அம்மாவை நித்தம் நினைப்பதும், வயது முதிர்ந்தவர்களை கண்டால் எனது அம்மாவின் நினைவு தான் வரும் எனக்கு அவர்களை எனது அம்மாவாக நினைத்து பார்த்தேன். என்றும்மறக்க முடியாது அம்மாவை.
“அம்மா இல்லையென்றால் எல்லாம் சும்மா தான்.”
இனிய காலை வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
எங்கள் வீட்டில் நடந்த முதல் இறப்பு “எங்கள்ஆச்சி”அப்போது நாங்கள் சிறுவர்கள்
எல்லோரும் அழுதார்கள் நாங்களும் அழுதோம்.
அதன்பின் நடந்த என் அம்மாவின் இழப்புத்தான் எங்கள் மனதை உலுக்கி இன்றும் என் மனதை விட்டு
நீங்காத நினைவு.1969ம் ஆண்டு.புரட்டாசி மாதம்
6ம் திகதி காலை எழுந்ததில் இருந்து அம்மா தொடர்ந்து இருமலால் சோர்ந்து போய்
அம்மம்மாவிடம் என்னால் முடியவில்லை ,நான் படுக்கப்போறேன் என்று கூறினார்.கூடத்தில் பாய்விரித்து அம்மாவைப்
படுக்க வைத்தோம்.அம்மாவின்
நிலமை அம்மம்மாவுக்கு புரிந்து விட்டது. வேக வேகமாக மூச்சுவிட்ட அம்மாவின் இறுதி நேரம் என்று.எல்லோரும் கூடி நின்றுசெபித்துக்கொண்டிருக்க.அம்மாவின் கண்கள்
மெதுவாகமூடிக்ககொண்டதுக்பிள்ளைகள் நாங்கள்அலறி அழ ,மூடிய அம்மாவின் கண்கள் மெதுவாக திறக்க பக்கத்தில்இருந்தவர்கள்
அழாதீங்க, அம்மாட உயிரை
நிம்மதியாகப் போக விடுங்க என்று கூற நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க அம்மாவின் திரும்பவும் மூடிக் கொண்டன.இன்னும் என் நெஞ்சில்நீங்காத நினைவாக உள்ளது .நன்றி பாமுகம்.
பெற்றோரே தெய்வம்…
கண்முன் கண்டதும் இன்றும் இது நடந்திருக்குமா என எண்ண வைக்கும் இழப்பு எமது பெரியப்பா ஓலை வீடு வேய்ந்து கொண்டிருந்தவருக்கு ஓலை எடுத்துக் கொண்டிருந்தார் சற்று நேரத்தில் தள்ளாடினார் படுக்க வைத்தனர் எழும்பவே இல்லை.. உறவுகள் வந்து பாதங்களை தொட்டுப் பார்த்து விட்டு குளறினார்கள்.. நம்பமுடியாத நான் பார்த்த முதல் பிரிவு என்றும் என்மனதை நெருடும் பேரிழப்பு. அன்று புரியவில்லை இன்று இதுவே மாரடைப்பு என மனம் ஏற்கிறது.
அன்றைய அவலக்குளறல் ஒலி இன்றும் மனதை உலுக்கும் மறக்க முடியாத மனதின் வலியே.
நன்றி
பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் பல மூத்த உறவுகள் இழந்தமையை பார்த்திருக்கின்றோம்.
பெரியம்மாவின் மூத்த மகன்
சிறு பிள்ளைகளுடன் குடும்பமாக வாழும் காலத்தில்
தன்னைத்தானே அழித்துக்கொண்டமை
நினைத்து ,நினைத்து
பெரியம்மா, அம்மா
கவலைப்படுவதை
பார்த்திருக்கின்றேன்.
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
தாலாட்டுப் பாடி என்னை அம்மா தூங்க வைத்த ஞாபகம்
இல்லை .தம்பி தங்கையரை
தூங்க வைத்தது இன்றும் ஞாபகம் .அம்மா பாடிய தாலாட்டு பாடலைப் பாடி எனது அக்காவின் பிள்ளைகளையும்
எனது பிள்ளைகளயும் நான்
தூங்க வைத்திருக்கிறேன்.
ஆனால் சிறு வயதில் பல கதைகள் சொல்லி தூங்க வைப்பது ஞாபகத்தில் உண்டு.ஞாபகமூட்டியதற்கு
நன்றிகள்.
பெற்றோரே தெய்வம்…
அம்மாவுடன் அனைவரும் ஒன்றாகப் படுத்துறங்கியது ஞாபகம். கதைகள் கூறியதும் நாங்கள் இடைமறித்து குழப்புவதும் பூச்சாண்டி வருகுது சத்தமில்லாமல் படுங்கள் என பயன்படுத்தியும் நித்திரையாக்கி விட்டு நுளம்பு குத்தாமல் ஒவ்வொருவரையும் போர்த்தி விடுவார் அம்மா.
மிக்க நன்றி
எங்கள் வீட்டில் சிறு பிள்ளையாய் இருக்கும் போது எனக்கு தாலாட்டுப் பாடியது ஞாபகமில்லை. தம்பிக்கு பாடும் போது என்னையும் அணைத்து தூங்க வைப்பார்கள். நிறைய கதை சொல்வார்கள். எழும்பியிருந்து கதை கேட்ட ஞாபகமுண்டு, பின்னர் அம்மா நித்திரை போல் நடிப்பார். நானும் நித்திரை போல் நடிக்கலாம் என நினைப்பேன், தூங்கி விடுவேன். ஆராரோ ஆரிவரோ … மாமன் அடித்தானோ
மல்லிகைப் பூ செண்டாலே …பாடல் ஞாபகமுண்டு தம்பியை ஏணையில்ப் போட்டு ஆட்டிய ஞாபமுண்டு. அம்மா சமையலறையில் வேலையாயிருந்தால், அப்பா நிறைய கதை சொல்வார். அண்ணாவும், நானும் அம்மா யாரின் பக்கம் திரும்புவா எனப் போட்டி போடுவம். அம்மா இருவரின் கையையும் பிடித்து தூங்குவா. தம்பியை காலில்ப் போட்டு உறங்க வைப்பா. நானும் காலில்ப் போட்டு உறங்க வைப்பேன். ஞாபகங்களை மீண்டுத் தந்த பாமுகத்திற்கு நன்றி.
பெற்றோரே தெய்வம்
சின்ன வயதில் அம்மம்மா காலை நீட்டி தலையனை வைத்து காலை ஆட்டி தாலாட்டுப் பாடி தூங்க வைப்பா .
தோலில் போட்ட தலையை சாய்த்து தட்டி தாலாட்டுப் பாடல்கள் பாடுவா.அம்மா.
மடியில் போட்டு அனைத்து தட்டி தாலாட்டுப் பாடல் பாடுவது முண்டு.
மாமாவின் சேலையை ஏனை கட்டி அதில் போட்டு, ஆட்டி நித்திரை ஆக்குவார். நானும் மகளை இப்படித்தான் நித்திரை ஆக்குவேன்.
வெளிநாட்டில் மகன் நித்திரை ஆகும்போது அம்மம்மா அம்மாவை நினைத்து உணவு தந்து பிள்ளை மை பார்த்தவர்கள் அவர்கள், எண்ணி அழுவேன் .
இப்போது அழுகை வந்தது.
மிக்க நன்றி.
பிள்ளைப்பருவத்தில்
எப்படி தாலாடினார்கள்
என்பது
எம் நினைவில் இல்லை.
அப்பப்பா மட்டுமே
என் நான்கு வயது வரை
வாழ்ந்த மூத்தபெற்றோர்.
சிறுவயதில்
நித்திரைக்குச் செல்வதற்கு முன்
அம்மா புராணக்கதைகள், திருப்புகழ், கந்தனுபூதி போன்றவற்றைச் சொல்லித்தந்தமை
பசுமரத்தானியாக இன்றும்
எம் மனதில் உள்ளன.
அம்மா இரவில் படுக்கும் போது நல்ல நல்ல கதைகள் சொல்வார் இப்ப நினைச்சாலும் இனிக்கும் தூக்கவும் வரும் நினைவிலும் இருக்கு அப்படியே படுத்து தூங்கிய நாட்கள்…. இடையில் கேட்கின்றீர்களா அல்லது படுத்து விட்டீர்களா என சத்தம் போடுவார் மறுநாள் மிகுதி கதையை சொல்லுங்கள் அம்மா என கேட்ட நாளும் உண்டு…
சொக்க சொக்கா சோறும் உண்டு சோளநாட்டான் கெடுத்து போட்டான் என்ற கதை நினைவில் இருக்கு….
எங்கள் வீடு சீற்போட்ட வீடு சரியான
வெக்கை அம்மாவுக்கு வேர்த்து ஓழுகும்
ஐயா பனை ஓலையில் கட்டிய விசிறியால் விசுக்குவா
தம்பிமார் சண்டை போடுவாங்கள் அந்த சத்தத்தில் நான் தூங்கி விடுவேன்….
யன்னலை திறந்து விட்டு காத்து வாங்கி படுத்த நாளும் உண்டு கள்ளர் இல்லாத காலம்…அது
(அம்மம்மாவுடன் இருந்த காலம் குறைவு அப்பம்மாவையும் பார்க்கவில்…
என் அம்மா எங்கள நித்திரை ஆக்குவது
தான் நடுவிலும் அம்மாவின் வலப்பக்கத்தில் இருவரும் இடப்பக்கத்தில் இருவருமாக வைத்து நித்திரை ஆக்குவது வழமை.
அப்போ எங்கள் வீடு ஓலை வீடு…
இரவில் சரியான வெக்கையாகத்தான் இருக்கும்…
அப்போ…அம்மா தான் இழைத்த விசிறியினால் விசுக்கித்தான் தன் கை உழையும் வரை விசுக்கி எங்களை நித்திரை ஆக்குவார்.
அம்மாக்கு கை உழைந்து போனதும் விசுக்குவதை நிறுத்தி விடுவார்.
அப்போ எனக்கு மட்டும் நித்திரை வராது.
அப்ப நான் கேட்பேன் அம்மா விசுக்குங்கோ விசுக்குங்கோ என்று.
அம்மாக்கோ முடியாமல் இருக்கும்.
என் அம்மா எங்கள நித்திரை ஆக்குவது
தான் நடுவிலும் அம்மாவின் வலப்பக்கத்தில் இருவரும் இடப்பக்கத்தில் இருவருமாக வைத்து நித்திரை ஆக்குவது வழமை.
அப்போ எங்கள் வீடு ஓலை வீடு…
இரவில் சரியான வெக்கையாகத்தான் இருக்கும்…
அப்போ…அம்மா தான் இழைத்த விசிறியினால் விசுக்கித்தான் தன் கை உழையும் வரை விசுக்கி எங்களை நித்திரை ஆக்குவார்.
அம்மாக்கு கை உழைந்து போனதும் விசுக்குவதை நிறுத்தி விடுவார்.
அப்போ எனக்கு மட்டும் நித்திரை வராது.
அப்ப நான் கேட்பேன் அம்மா விசுக்குங்கோ விசுக்குங்கோ என்று.
அம்மாக்கோ முடியாமல் இருக்கும்.
பெற்றோரே தெய்வம் வரிகள்
இரவில் தூங்க வைக்கும் தந்திரங்கள். பாட்டு கதை சொல்லி தூங்க வைப்பார் அம்மா. காகம் நரி கதை.
புறா பாம்புக்கதை இப்படியான கதைகள் சொல்லுவா.
அதிகமாக ஆராரோ ஆரிவரோ
இந்தப் பாடல் இன்றும்
நினைவாக உள்ளது.
என் சகோதரர்களுக்கு பாடியபோது
நானும் சேர்ந்து பாடுவேன். இன்று நினைக்கும்போது
அந்த நாட்களின்
ஆனந்தமாக மறக்க மறக்கமுடியாத நினைவாக உள்ளது
எங்கள் வீட்டில் ஆளுமை அதிகாரம் கட்டுப்பாடு எல்லாமே அம்மா தான்.
அப்பா கொழும்பில் கெப்பிட்டல் தியேட்டரில் வேலை, ஊருக்கு வந்தால் அன்பாக எங்களுடன் நேரத்தை செலவளிப்பார்.
பின்னர் நிறைய தோட்டங்கள், வயல்கள் ஆட்களை வைத்தும் செய்து கொண்டிருப்பார். அப்பா, அம்மா இருவருக்கும் நாங்கள் நல்லா படிக்கவேண்டும், நல்ல வேலை செய்ய வேண்டுமென்பது தான் விருப்பு. சிறிய வயதில் ஊரில் படித்த காலத்தில், எனக்கு பரீட்சை என நான்கு மணிக்கு எழும்பினாலும் அம்மா நான்கு மணிக்கே எழும்பி தேநீர் போட்டுத் தருவா. அருகிலிருந்து ஏதாவது பேப்பர்களை அடுக்கிக் கொண்டிருப்பா. அல்லது சமையல் வேலை என தொடங்கி விடுவா. சிறிய வயதில் அம்மா சமைக்கும் போது அருகிலிருந்தால் வாய்பாடு. சொல்லித்தருவா, வாசிக்க விடுவா, ஏதாவது பாடசாலை பற்றி கேள்வி கேட்டு நல்ல தோழி போல் கதைப்பா. இருவரும் எங்களை அடித்தோ, கண்டித்தோ திருத்தவில்லை, அன்பாலும், இப்படி வாழ வேண்டுமெனவும் சொல்லித் தான் திருத்துவார்கள்.
அவர்களிடம் கற்றுக்கொண்டது போல், நானும் தொடர்கின்றேன். பிள்ளைகள் படிக்கும் போது அருகிலிருந்து நானும் ஏதோ கிறுக்கல்கள் செய்வேன். வேலையில்லையென்றால், படுக்கலாம் தானே என்பார்கள். ( இதெல்லாம் என் அம்மா வேறு வேலைகளுடன் என்னைக் கவனித்திருக்கிறா என்பது புரியுது.)
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
ஐயாவின் உழைப்பு ,அம்மாவின் திறமை, இரண்டுமே நான் பார்த்திருக்கிறேன்.
ஐயா தரும் பணத்தில் அம்மா
கணக்குப் பார்த்து செலவு செய்து மீதிப் பணத்தை உண்டியலில போட்டு சேமித்து
வீட்டுத் தேவைகளை கச்சிதமாக செய்து முடிப்பார்.
அதில் ஐயா சந்தோசப் படுவார்.ஐயாவின் கட்டுப் பாட்டில் அம்மாவின் ஆளுமையில்அழகாக நடந்தது நான் கண்ட என் குடும்பம்…
வீட்டுத் தலைவர்களை மதித்து
ஆளுமை கொண்ட பெண்களாக எம் தாய்மார்
இருந்தது பெண்களுக்குப். பெருமையே….
நன்றி.
எங்கள் பெற்றோருடன்
வாழும் காலத்தில்
பொருளாதார ரீதியில்
பலம் அப்பாவிடமே!!
ஆனால் அதனை கொண்டு குடும்பத்தை நிர்வகித்த திறன் அம்மாவிடம்!!
வீட்டில், வளவில் கிடைக்கின்ற
மா, புளி, இலுப்பை , தென்னை…… போன்ற
வளங்களை பெருக்கி
அவற்றையும் பணமாக்கிய பெருமை
அம்மாவின் கைங்கரியமே!!!
அப்பாவின் தொனி
மேலோங்கி இருந்தமையால்
வெளித்தோற்றத்தில்
அவரே எங்கள் வீட்டின் ஆளுமை.🙏
வணக்கம்
பெற்றோரே தெய்வம் எங்கள் வீட்டில் நிர்வாகப் பொறுப்பில், பிள்ளைகள் வளர்ப்பில் அம்மாவே , ஆற்றலுடன் ஆளுமையுடன், பாசம், நேசப்பகிர்வுடன் கட்டியம் கூறி வாழ்வின் முதன்மை தாயிடமே. நாமும் பொறுப்புள்ள வாழ்வின் பற்றை பார்த்து வளர்ந்திட எம்மையறியாமலே எமக்குள் ஊடுருவியுள்ளது எனலாம். தந்தை தொழில் நிமித்தம் வேறிடம் என்பதால் பெற்றோர் நிர்வாக அதிகாரம் அம்மாவிடமே.
நன்றி
பெற்றோரே தெய்வம்.
அம்மா, அப்பா கார் வைத்திருந்தார். ரொலி எடுத்து நட்டப் பட்டார். கடன் கூட அப்போது தான் அம்மா சீட்டு போட்டு கடனை அடைத்தார்.
நிர்வாகம் தன் கைக்கு வந்தது. வேலையிடத்தில் வீடு கட்ட பணம் கடன் பட்டார் அப்பா. அவரின் வருமானம் மாதமாதம் கழித்து விடுவார்கள்.
அம்மா பால்,தேங்காய், மாங்காய் மற்றும் கிடுகுபின்னி விற்று
வீட்டு வீட்டு நிர்வாகம் பாத்தார். முக்கிய தேவைகளையும் செய்தார் . சாப்பாடை தவித்து மற்றையதை பாத்து செய்வதும் சிறப்பு. சிறுதுளி சேமிப்பும் முண்டு. இவற்றை பாத்து வியந்ததும் உண்டு.
எங்களுக்கு கூறுவா உழைப்பில் முதல் உணவு அத்தியாவசிய தேவைகள் பயணம் பின்னர் மிச்சம் மிச்சம் கொஞ்சம் பிடிக்க வேனும் கடன் படக்கூடாது என்று கூறுவார். எத்தனை படங்கள் கெக்கன் சோ படம் பாக்க கூட்டி சென்றார்கள் காரணம் பெண் பிள்ளைகள் என்று.
கோவில் திருவிழா , கீரிமலை குளிக்க மறக்க முடியாத அனுபவங்கள்.
நாம் 50% தான் அப்படி வாழமுடிகிறது. கடன் இல்லாமல் வாழ்வதை எண்ணி மகிழ்கிறேன்.
பெற்றோரை எப்போதும் எண்ணி பெருமை கொள்கிறேன்.
நினைவு கூர்ந்த மைக்கு நன்றி.
அவற்றை கேட்டு மகிழ்ச்சி ஒருபுறம், மறுபுறம் கவலையும் படுவதுண்டு .
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
எனது பாடசாலை நாட்களில்
புத்தகம் கொப்பிகளுக்கு உறை போட்ட ஞாபகம்
இன்னும் பசுமையாக
என் மனதில்
கடைகளில்உறை போடுவதற்க்கென பேப்பர்கள் விற்பனையி்ல்இருந்தது்
வாங்கிபோடுவோம்
சீமேந்து வரும் பேப்பரிலும்போட் டிருக்கிறேன்.வேப்ப மரத்தில்
பட்டை சீவி வடிந்திருக்கும்
பிசினால் ஒட்டியிருக்க்கிறேன்
சிறிய வெள்ளைப் பேப்பரில்
பெயர் எழுதி முன்பகுதியில்
ஒட்டுவோம். நன்றி்.
“பெற்றோரே தெய்வம்”
பாடசாலை தொடங்கப் போகிறது என்று புத்தகம் கொப்பிகளுக்கு உறை போட்டு அதற்கு மேல் வெள்ளை நிறத்தில் ஒட்டி பெயர் எத்தினையாம் வகுப்பு என்று எழுதுவதும் அழகே. மற்றவர்களுக்கும் செய்து கொடுப்பதும் பிடிக்கும்.நானும் மயில் இறகை புத்தகத்திற்குள் வைத்து விட்டு ஒவ்வொரு நாளும் பார்த்து ஏமாந்ததுதான். இரவில் படிக்கும் போது அம்புலிமாமா புத்தகம் வைத்து கதை வாசிப்பேன், அம்மா வரும்போது கொப்பிக்குக் கீழ் வைத்துவிடுவேன்.பயம்தான்.
றாஜினி.அல்போன்ஸ்
சிறிவயதில் அம்மா தான் கொப்பிகளுக்கு அழகாய் உறை போட்டுத்தருவார்.
அந்த உறை அப்பா சவுதியில் இருந்து பொருட்களுடன் பெட்டி அனுப்புவார்.
அதனுள் மிக அழகான காட்சி படங்கள் உள்ள கலண்டர் அதையும் அதனுள் வைத்து அனுப்புவார்.
அதனைத்தான் அம்மா எங்கள் கொப்பிகளுக்கு உறை போட்டுத்தருவார்.
அப்போ எனக்கு அது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
கல்வியங்காட்டில் ஆடியபாதம் வீதியில் படக்கடை பலா அண்ணா இவருடைய கடை நாங்கள் இருந்த வீட்டிற்கு எதிரே…
அவரிடம் தான் எங்களுக்கு தேவையான கொப்பி,பிறவுண் உறை,குட்டிக்குட்டி ஸ்ரிக்கர் எல்லாம் வேண்டி மிக அழகாய் ஒட்டி எங்கள் கொப்பிகளை அழகு பார்ப்போம்.
இன்றும் கூட என்னிடம் என் சிறு வயது கொப்பியின்
முன் மட்டை ஒன்றை வைத்து பாதுகாத்து வருகிறேன்.
நானும் மயிலிறகு குட்டி போடும் எனவும் அதற்க்கு வாசமான பவுடர் கொஞ்சம் தூவி தினம் தினம் தொட்டுப்பார்க்கவும் தவறமாட்டேன்.
நினைவுகளை மீட்டிப்பார்த்திலும் மிக மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி பாமுகம்…
02/03 ஞாயிறு :
“சமூக ஒருங்கிசைவை வலியுறுத்தும் ஆண்டு 2025” :
“மூத்தோர் மாண்பு போற்றும் சிறப்பு மாதம் மார்ச் 2025” :
Fatvtamil.com
“பெற்றோரே தெய்வம்”
அன்று சிறு வயது பள்ளி காலங்களில்..
பள்ளி பாட புத்தகம் கொப்பிகளுக்கு, உறை போட்டு அழகு பார்த்த விதங்கள்…
அதற்குள் மயில் இறகு வைத்து குட்டி போடும் என எண்ணி ஏமாந்ததும்…
மர இலை போன்ற இன்னும் பல வித விதமான விடயங்களை செய்த அன்றைய நினைவுகள்…!
[ பெற்றோருடன் வாழ்ந்த காலங்களூடாக, அவர்களை நன்றியோடூ உயிரூட்டுவோம்…]
“பெற்றோரே தெய்வம்”
அன்று சிறு வயது பள்ளி காலங்களில்..
பள்ளி பாட புத்தகம் கொப்பிகளுக்கு, உறை போட்டு அழகு பார்த்த விதங்கள்…
அதற்குள் மயில் இறகு வைத்து குட்டி போடும் என எண்ணி ஏமாந்ததும்…
மர இலை போன்ற இன்னும் பல வித விதமான விடயங்களை செய்த அன்றைய நினைவுகள்…!
இனிய காலை வணக்கம்,
பெற்றோரே தெய்வம்
பள்ளிக்காலங்களில்
ஒவ்வொரு
புதிய வகுப்புகள் ஆரம்பங்களில்
எங்கள் கொப்பி, புத்தகங்களின் அழகோ தனி அழகு.
சீமெந்து வரும் பைகள்,
மெழுகு , உறைபோடுவதற்கு என விற்கப்படும் பேப்பர்
எத்தனையோ உறைகள்…
அப்பா வாங்கித்தந்த உறைகள்.
தங்கம் மச்சாள் பசை காய்ச்சி உறைகளை அழகாக
போட்டுத்தருவார்.
தலையணைக்கு கீழ்
அடுக்கி வைத்த காலம்
என்றும் எம் நினைவில்
சமயப்புத்தகத்திற்குள் மயில் இறகுகள்,
அரசம்இலைகள்,
இன்னொரு வகை இலைகள் என
கொப்பிகளுக்குள் வைத்து பாதுகாத்தமை
ஏராளம்…..
நகுலவதி தில்லைதேவன்
பெற்றோரே தெய்வம்.
எங்கள் வீட்டு வசேடத்துக்கு அப்பாவின் பெற்றோர் சகோதரர்களுக்கு
அவர்கள் வாழும் இல்லங்களுக்கு சென்று அழைப்பு விடுவார்கள்.
அவர்கள் பலகாரம் செய்ய எங்கள் வீட்டுக்கு வருவார்கள்.காலை மாலை என்ன என்ன முன்னரே செய்ய முடியுமோ அவர்கள் செய்வார்கள்.
இருவர் போய் சொன்னால் தம்பதிகளாக வருவார்கள்.
ஆண் சென்று சொன்னால் ஆண் மாத்திரம் சமூகம் வருவார்.
அப்போது நேரில் சென்று சொல்வார்
இப்போது கைபேசியில் அழைத்து சொல்கிறார்கள்.
அப்பா அம்மா எனது திருமண தத்தின் போது எத்தனை நாட்கள் சென்று சொன்னது கண்முன்னே நினைவு வந்தது.
நன்றி.
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
பெற்றோரே தெய்வம்
15-06-2025
அன்று எங்கள் வீட்டு விசேடங்களுக்கு..…
நாங்கள் வசிக்கும் ஊரிலுள்ள உறவினர், நண்பர்களை நேரில் சந்தித்து கொண்டாட்டம் பற்றி அம்மா அறிவித்தா.
தூர தேச உறவுகளுக்கு அப்பா சென்று அறிவித்து வருவார்.
இன்னும் மற்றைய பகுதிகளிற்கு அண்ணா சென்று அறிவித்து வருவார்.
மேலும் வெளிநாட்டு உறவுகளிற்கு தபால் மூலம் அறிவித்து விடுவோம். வீட்டு வேலைகளை ஊரிலிருக்கும் உறவுகளோடு அம்மா பார்க்க, அப்பா, அண்ணாவும், உறவுகளும் வந்து கலந்து கொண்டார்கள்.
இப்படியாக எனது அக்காவிற்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது..
பெற்றோரே தெய்வம்
அன்று எம் வீட்டில் நடைபெறும் விசேட தினங்களுக்கு
நாம் நேரில் சென்று அழைப்பு சொல்வதே வழக்கம்.
ஒரு வீட்டில் ஆணுக்கு மட்டும் சொல்வதென்றால் அப்பா மட்டும் போவார்.
எல்லோருக்கும் அழைப்பு எனில் பெண்களில் ஒருவரும் செல்ல வேண்டும்.
அழைப்பவர் வீட்டிற்கு சென்று சொன்னால் தான் அவர்கள் வருவார்கள்.
பெற்றோரே தெய்வம்,
க.வா. என்ற பெயருடன்
சமய, சமூகப் பணிகளை செய்த அப்பா
தன்னைப் போலவே பிள்ளைகளை பொறுப்புடன், ஒழுக்கத்துடன் நற்பண்புடன் வளர வேண்டும் என வழிகாட்டியவர்.
தனித்துவத்துடன் தலைமை தாங்கி நடாத்தும் பண்பு மிக்கவர்.
எடுத்த பொருளை வேலை முடித்து அதே இடத்தில் திரும்ப வைத்தல்,
தேவைக்கு வாங்கிய பொருளை உடனே திருப்பிக்கொடுத்தல்,
மூத்தோர்களை போற்றும் பண்பு போன்ற பலவற்றை
நம் வாழ்வில் தொடர்வதற்கு காரணமானவர்
எம் கண்ட தெய்வம் அப்பாவே.🙏🏽
சாந்தினி
1.6.25
நகுலவதி தில்லைதேவன்
பெற்றோரே தெய்வம்.
என் அப்பாவை அன்றும் இன்றும் வியந்து பார்க்கிறேன்.
குடும்பத்தின் நேசிப்பது அதே போல எல்லாரையும் மதித்து நேசிப்பது.
ஏனைய உயிரினங்களையும் நேசிப்பவர்.
உ+ம் செல்லப்பிராணி நாய் பசு கோழி இவற்றுக்கு உணவு கொடுப்பது நோய் வந்தால் கைவைத்தியம் பார்த்து மாத்தி விடுவார். அரையண்டப் படாமல் கையினால் எண்ணெய் போடுவார் எங்களில் ஒருவரை உதவிக்கு அழைப்பார்.
.அதிகாலை எழுந்தால் தேனீர் 4.30 காலை கொடுப்பேன் . ஏதாவது வேர்களை செய்யார் .
இரவில் கார் உதவி கேட்டு வைத்தியசாலைக்கு செல்ல கேட்டால் உடனே செல்வார்.
எனக்கு இரவில் இருமல் இருக்கும் நித்திரை கொள்ளாது வந்து தண்ணீர் மிளகு தருவார் இப்போதும் மறவேன்.
உ+ம் சொல்லி புத்திமதி சொல்வார் கலங்க மாட்டார் அம்மாவுடன் இசைந்து வாழ்ந்தார் இப்பவும் அவர் வாழ்ந்த வீட்டை அவர் பெயரைக் கொண்டு அழைப்பார்கள்.
நானும் அங்கு கந்தையா வின் மகள் என்பதில் மகிழ்ச்சி. வியப்புகள் பற்பல அப்பாக்கள் ஆணிவேர். அவரை எந்த நேரத்திலும் நினைப்பதில் மகிழ்ச்சியும் வாழ்த்துக்கள்.
நன்றி.
பெற்றோரே தெய்வம்.
உறவில்லாத உறவுகளுடன் அன்னியோனியம்.
பெற்றோருடன் வாழ்ந்த
காலத்தில்
அயலவர், உறவினர் உறவு
பலமானதே…….
எம் வீட்டில் தினம் தினம்
அப்பாவின் நண்பர்கள்
உறவாடுவது வழக்கமே…..
உணவுபரிமாற்றங்கள்
இன்ப துன்ப நிகழ்வுகளில் இணைவு
இயல்பானதே…..
எம் கிராமம் சிறியது
எம் முன் தலைமுறையினர்
ஊரில் உள்ளவர்களையே
திருமணம் செய்வார்கள்.
இதனால்
உறவில்லா உறவினர்கள் என்பது
அப்போ அரிதே…..
பெற்றோரே தெய்வம்.
இப்போதும் என் அம்மா என்னுடன் இருந்தால்…….
எங்களில் 7 பெண்கள். 1 மகன்.
எனக்கும் தங்கைக்கும் ஆண்பிள்ளைகள் பிறந்தது என்று ஆனந்தம் அடைந்திருப்பார். மூத்த மகன் பிறந்து 2 வயதில் அம்மா இறைபதம் அடைந்து விட்டார்.
அவரிடம் பிள்ளைகளை காட்டி மகிழ வைத்திருப்பேன்.
30 வயதில் வெளிநாடு வந்தேன். சுத்த சைவம்.
35 வயதில் மாமிசம் சாப்பிடவேண்டி வந்தது. அப்போது நினைத்தேன் அம்மா சாப்பிட சொல்லும் போது சாப்பிடவில்லை , ஊருக்கு போய் அம்மாவிடம் அசைவம் சாப்பிட வேண்டும் என்று
சந்தோசமாக சாப்பிட்டு இருப்பேன்.
எனது கஷ்டங்களை சொன்னால் அதற்கு விரைவில் நல்ல பதில் சொல்வார்.
இப்போது என்னுடன் இருந்தால் எனக்கு பெரிய நம்பிக்கை ,தோழி,தோழனாக அவர்களை நான் காத்திருப்பேன். உறுதுண யாக இருப்பேன்.
என்றும் என் கண்முன் நினைவுகள் நிழலாடும்.
அப்பாவின் 29வது நினைவுநாள் 25.5.25. அதற்கு முன் கனவில் வருவார்.
நன்றி
பெற்றோரே தெய்வம்,
எம் அம்மா இப்போது இருந்திருந்தால்
சமையல் அறை பக்கம் போகத்தேவையில்லை.
எம் பிள்ளைக்கு பாடல், கதைகள் சொல்லிக்கொடுத்திருப்பார். சிறு நோய் என்றால் கையில் திருநீற்றுடனும் திருமுருகாற்றுப்படை பாடலுடனும் முன் நிற்பார்.
பெற்றோரே தெய்வம்,
எம் அம்மா இப்போது இருந்திருந்தால்
சமையல் அறை பக்கம் போகத்தேவையில்லை.
எம் பிள்ளைக்கு பாடல், கதைகள் சொல்லிக்கொடுத்திருப்பார். சிறு நோய் என்றால் கையில் திருநீற்றுடனும் திருமுருகாற்றுப்படை பாடலுடனும் முன் நிற்பார்.
வெளியில் சென்று வர நேரம் பிந்திவிட்டது என்றால் வாசலில் காவல் நிற்பார்.
எம் குடும்ப விளக்காக
தன் ஒளி முழுவதையும்
பரப்பி எம்மை ஆளாக்கி
பாரினில் மிளிரச்செய்தவர்
எம் அம்மா.
கணக்கில் புலி அவர்
என வகுப்புத் தோழர்
செல்வதை கேட்டிருக்கின்றோம்.
தன் ஆசைகளை அடக்கி
எமக்காக தன்னை தந்தவர்.
எல்லா அம்மாக்களும்
இப்படி தானே என்றால்
எம் அன்னை ஒருபடி மேலே
என்பேன்.
சாப்பாட்டில் கூட
தனக்காக எதனையும்
செய்யாது
எங்களுக்காக செய்தவர்.
அம்மாவிற்கு எமது அஞ்சலி.
பெற்றோரே தெய்வம்.
“அன்னையர் தின வாழ்த்துக்கள் ”
குடும்பத்தில்
சாதாரன வேலை வீட்டு வேலை இருக்கு ம்.
ஆனால் எங்களை வளர்பதற்காக மாடுகள் வளர்த்தார். பால் கறந்து விற்பது மாட்டை பராமரிப்பு வேலைகள். குத்தகை காணி பாத்து அதில் தேங்காய் ஓலை கிடுகு பின்னி விற்பது என்று பல முயற்சிகள் செய்து கஸ்ரப் பட்டு ,வளர்த்தார்.
சொல்வார் பெண்பிள்ளைகள் என்று,எங்களுக்கு குறையில்லாமல் வளர்த்தார்.
வீட்டில் எல்லோரும் சேர்ந்து வேலைகளை செய்தாலும் அம்மா அந்த அந்த நேரத்தில் அவர் தான் எல்லாம் செய்தார்.
அம்மா பட்ட கஸ்ரங்களை பாத்து அவரிடம் நான் எதனையும் கேக்க மாட்டேன்,
ஆனால் அம்மா எனது தேவையான வற்றை செய்வார்.
அம்மா அம்மா எங்களுக்கு மாத்திரம் அல்ல உதவி என கேட்டவர்களுக்கு தன்னால் ஆன உதவி செய்வார்.
இப்பவும் அம்மா அப்பா வை பற்றி கதைப்பவர்கள் உண்டு. பெற்றோரை
“ஒருநாளும் மறவாதே”
இனிய காலை வணக்கம்,
பெற்றோரே தெய்வம்,
எம் சிறுவயது பருவத்தில்
எங்கோ கடிதக்காரர்
ஊதியின் சத்தம் கேட்டால்
எமக்கு கடிதம் வரும் என எண்ணி படலைக்கு ஓடி போய் காத்து நிற்கும் தருணம் பல.
எங்கள் வீட்டிற்கு தினமும் கடிதம் வருவதுண்டு.
சில தபால்காரர்களை மறக்கமுடியாது ,
வீட்டிற்குள் வந்து கடிதம்
தந்ததும் உண்டு.
காக்கி நிற உடுப்பு ,
வாசலில் சைக்கிள் மணியின் தொடர் ஒலி
இவை
தபால்காரர் வரவை
அறிவுறுத்தும் வெளிப்பாடுகள்.
தினமும் காலையில்
பத்திரிகை கொண்டு வருபவர்
சாந்தி எனக் கூவிக்கொண்டே வருவார்.
உறவுக் கடிதங்கள் எம் உணர்வுடன் சங்கமிப்பவை.
அப்பா கடிதம் எழுதும் விதம் என் கண்ணில் நிழலாடுகிறது. 🙂
பெற்றோரே தெய்வம்.
எங்கள் ஊர் தபால்காரர் காக்கி நிற 1/2 கால்சட்டை யுகம் அதே நிற சேட் தொப்பியும் அணிந்து சைக்கிளில் வருவார்.
விசில் ஊதும் சத்தம் 200மீற்றர் வரை கேக்கும்.
கேட்டவுடன் விரைவாகச் சென்று வாசலில் நிற்போம்.
சண்டை பிடித்து பறித்து சென்று அம்மாவிடம் கொடுப்பது வழமை.
தந்தி வந்தால் அது துக்க செய்தி என பயப்படுவதும் உண்டு.
பலருக்கு தெய்வமாக இருந்து சில காலத்தில். கனவின் மனைவி வேலைக்காக பிரிந்து இருந்து கடிதம் எழுதுவதும்
எனது கணவர் சவுதியில் வேலை தபால் காரை தினமும் எதிர் பாத்த காலம்.
அம்மா அப்பா வுடன் இருந்த போது வேலைக்கு விண்ணப்பிக்க கடித மூலம் அனுப்பி பதிலை எதிர்பார்த்து காத்திருந்த காலமும் நினைவுகள் தொடரும் .
வெளிநாட்டு வந்து கிழமைக்கு 1கடிதம் எழுதி அம்மா மாமி அனுப்பி விட்டு பதிலை எதிர்பார்த்து நிற்பாராம் அம்மா.
இப்போதும் அவர்களின் கடிதம் என்னிடம் உள்ளது.
நன்றி
நகுலவதி
இனிய காலை வணக்கம் “
“பெற்றோரே தெய்வம்”
சிறுவயதில் அழகழகாய் என்
பாதங்களை அலங்கரித்த
காலணிகள் எத்தனை எத்தனையோ …பிந்திய காலங்களில் அணிந்ததும் வகை வகையாய்….
காலணியில் ஒன்றுதான்
என் பாதத்தை பதம் பார்த்தது
இன்றும் என் வினை தொடர்கிறது. இளம்வயதின்
அனுபவித்தவைகளை இன்றுஅனுபபவிக்க முடிவதில்லை….
🙏அனைவருக்கும் இனிய காலை வணக்கம்🙏
என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
பெற்றோரே தெய்வம்
13-04-2025
ஆரம்பப் பள்ளி செல்லும் பருவங்களில் என் பாதங்களை கறுப்பு சன்ரில்ஸ் அலங்கரிக்கும்.
பாடசாலை சன்ரில்ஸ் என மிகவும் கவனமாக பாதுகாப்பேன். வீட்டிற்கு என வேறு பாட்டா வைத்திருந்த ஞாபகம். அதன் பின்னர் வெள்ளை சப்பாத்து, வெள்ளை சொக்ஸ் எனப் போட்டோம்.
குறுகிய காலத்தில் எல்லாம் மாறிக்கொண்டேயிருந்தது. அப்பா வெள்ளை சப்பாத்து வாங்கித் தந்தவர். அம்மா தான் சன்ரில்ஸ் வேண்டித் தந்தவா.
சிறு வயதில் பாட்டா போட்ட காலத்தில் வெளிநாட்டு உறவுகள் சப்பாத்துடன் வந்திறங்குவார்கள். கால்களில் சொக்ஸை மடித்து விட்டிருப்பார்கள். மிக அழகாக இருக்கும். இன்றும் என் கால்களில் சொக்ஸ் போடும் போது அவர்களும் மெல்ல ஞாபகத்தில் வந்து போவார்கள்.
அழகான காலத்தை மீட்டுத் தந்த பாமுகத்திற்கு என் நன்றிகள்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
காலை வணக்கம்
பெற்றோரே தெய்வம்
சிறிய வயதில் செருப்பும் ,சான்டில் போட்ட ஞாபகம். ஞாபகம் வருதே
இப்போது.
பாடசாலை மாறி போகும் போது அங்கு வெள்ளை சட்டை வெள்ளை, கால்மேல் சப்பாத்து கட்டாயம். சப்பாத்து பொலிஸ் இல்லை. வெள்ளை சோக்கு தான் கைகொடுக்கும். செருப்பும் சிலவேளை போடுவது.
செருப்பு அறுந்து விட்டால் ஆணி அடித்து சென்றதும் முண்டு ஊசி குத்தியும் உண்டு.
இனிய வணக்கம்,
பெற்றோரே தெய்வம்,
எங்கள் ஆரம்ப பள்ளி
பக்கத்தில் என்பதால்
பாட்டா செருப்பணிந்து
நடந்தே செல்வோம்.
அப்பா நால்வருக்கும் ஒரே மாதிரியான
பாட்டாக்களே வாங்கித்தருவார் .
ஆனால்
அப்பா பாட்டா போட்டத்தை பார்த்ததே இல்லை.
வளர வளர செருப்புகளின் வடிவங்கள் மாறின.
அந்த காலத்தில் பாட்டா செருப்பணிவதே
தனி சுகம்.
சாந்தினி.
இனிய காலை வணக்கம்,
பெற்றோரே தெய்வம்,
முன் விறாந்தையால்
வாசல் வழியாக உள் நுழைந்தால் நடைகூடம்
அடுத்து நாற்சார் வடிவில் அகன்று விரிந்த அமைப்பு
பெரியறை(சாமியறை),
சின்ன அறை, சமையல் அறை, முன் அறை என அமைந்த
எங்கள் வசந்தமாளிகை.
தெற்கு வாசல் கதைவைத்திறந்து
நிலத்தில் பாய்போட்டுப்படுத்தால்
தென்றல் காற்று
எம்மை தாலாட்டும்.
சிறு வயதுப் பருவத்தில்
நடைகூடம் மண்ணால்
அமைந்திருந்தது
அம்மா ஈரமான
இலுப்பக்கொட்டை, எள்ளு, புளியம்பழம்
போன்றவற்றை
பாய் விரித்து பரப்பி
காய வைப்பார்.
சுற்றி வர பயன்தரு மரங்கள்
வீட்டை பாதுகாத்தன.
இயற்கையுடன் வாழ்ந்த எங்கள் வீடு என்றும் எம் கோயிலே.!!!!😀
நான் அப்பாவின் அப்பா வீட்டில் 5வயதுவரை வந்தேன்.
பெத்தாச்சி, அப்பப்பா,ஆச்சி,சித்தப்பா 3வர், மற்றும் 4 மாமிகள் கூட்டுக் குடும்பமாக. 4 வயது வரை. கல்வீடு மண்குசினி விறாந்தை விளையாட மண்முற்றம்.
அப்பா வீடு கட்டி 5வயதில் அங்கு போனோம். வீட்டில் இருந்து கொண்டு வீடு முழுமையாக கட்டி முடிக்க எனக்கு 9 வயது அம்மம்மா அம்மா அப்பாவுடன் அக்கா அண்ணன் தங்கை என்று விளையாடி வாழ்த ,
“கற்பகதரு” வீடு என்நெஞ்சில் நிழலாடுகிறது.
நன்றி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
இனிய காலை வணக்கம்,
பெற்றோரே தெய்வம்
30-03-2025
சிறுவயதில் என் குடும்பத்தில் படுக்கை இடம் சொல்லும் கதை…..
நானும் அண்ணாவும் அம்மா யாரின் பக்கம் திரும்புவா எனப் போட்டி போட அம்மா இருவரின் கையையும் பிடித்து தூங்குவா, நான் முழிக்கும் போது அம்மா அசதியாக அண்ணா பக்கம் திரும்பியிருந்தால், நான் ஒரு மொக்கு பிள்ளை.., எனக்கு நித்திரை வராது. எழும்பியிருப்பேன். அம்மா “படு பிள்ளை” என அணைத்து தூங்கி விடுவோம். சிலவேளை அம்மா சமையலறை வேலையென்றால், நான் அண்ணா, தம்பி படுத்திருப்போம். அண்ணா நிறைய பகிடி சொல்வார். சிரித்துக்கொண்டு தூங்காவிடில், அப்பா படுக்க வைப்பதாக வருவார். ஒரே கதையும், சிரிப்பும் தான்….
சில வேளை அம்மம்மா எங்களுடன் வந்து படுத்தால், எனது தலையணை கொடுப்பேன். தம்பியின் தலையணையில் சேர்ந்து தூங்குவேன். இரவில் தம்பி உருண்டு தலையணை இல்லாமல் உறங்குவார். நான் கவனமாக தலையை தூக்கி வைத்தாலும், உருண்டு போய் விடுவார். ஒரு சந்தோஷ்மான காலம்…ஞாபகமூட்டி கண்ணீர்துளியைத் தந்த பாமுகத்திற்கு நன்றிகள்.
இனிய காலை வணக்கம்,
பெற்றோரே தெய்வம்,
குழந்தை பருவத்தில் இருந்து
வெளிநாடு வரும்வரை
அம்மாவின் படுக்கையில் பங்கெடுப்பவள்.
மரக்கட்டில், பாய்
தலையணை, பெற்சீட்
என்பவை எம் படுக்கையை சுகப்படுத்துவன.
முன் இரவில் தனியே படுத்து
முன் விடியலில்
அம்மாவின் சூட்டில்
தூங்குவேன்.
எங்கள் வீட்டில்
ஆரம்பத்தில் சாணத்தால் மெழுகிய மண் நிலத்தில் படுப்பது
இப்பொழுதும் நினைக்கையில் உடம்பிற்கு இதமாகவே உள்ளது.
சில வேளைகளில் பாயில் படுக்கும் போது
உருண்டு உருண்டு
படுப்பதுவும் உண்டு.
பெற்றோரே தெய்வம்
30.03.2025
தர்ஜினி சண்
Swiss
சிறு வயதில் என் குடும்பத்தில்
என் படுக்கை இடம் சொல்லும் கதை என்னவென்றால்…..
எனக்கு என் சிறு வயதில் பெற்சீற் என சொல்லவே வராது…(போர்வை)
பெஸ்சீட் என்று தான் எனக்கு சொல்ல வரும்.
அதே நேரம் அந்த பெஸ்சீட் இல்லாம நான் நித்திரை கொள்ள போகவே மாட்டேன்.
என் உறவுகளில் சிலர் அதை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்வார்கள்.
நான் அதை சரியா சொன்னா தான் தருவம் என்பார்கள்….
என் அம்மாவும் அவர்களுடன் சேர்ந்தே சிரிப்பார்.
அதே நேரம் குடும்ப நிகழ்வுகளில் இரவு நேரத்தில் எல்லோரும் நித்திரைக்கு போனதும் அம்மா அடுப்புக் கரி எடுத்து மாவாக்கி கொஞ்ச தண்ணி விட்டு எல்லோருக்கும் பெரிய மீசை பூசி விடுவதில் அம்மா கெட்டிக்காறி…
எல்லோருக்கும் மீசை வரைந்திட்டு தானும் போய் நித்திரையாகிடுவார்..
பின்பு என்ன
விடிய எழும்பினதும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்புத்தான் இன்றும் என் கண்களில் என் அம்மாவின் சிரிப்பு….
இவற்றை மீண்டுமாய் நினைக்க வைத்ததைக்கு மிக்க நன்றி❤️🙏🏽
தர்ஜினி சண்.
பெற்றோரே தெய்வம்
நான் இங்கு 1986 வந்து விட்டேன்.இங்கு மகன் பிறந்தார் . பார்க் ஆசப்படார். அம்மாவின் இறப்பு 1989தில் நடை பெற்றது.
எங்களில் 7 பெண்பிள்ளைகள். அக்காவுக்கும் எனக்கும் 3 பெண் குழந்தைகள்.
ஆண்குழந்தை எனக்கு பிறந்தும் அம்மா சந்தோசப் பட்டார்.
1வது பிறந்த நாள் அன்று
அம்மா பேரன் இல்லாமலே பலகாரம் செய்து உறவுகளுக்கு கொடுத்து மகிழ்ந்தார்.
3வயது வரை அப்படி செய்வார். அவர் இறந்தும் இன்று வரை நினைத்து பார்ப்பேன்.
அதுமட்டுமல்ல நானும் அம்மாவை நித்தம் நினைப்பதும், வயது முதிர்ந்தவர்களை கண்டால் எனது அம்மாவின் நினைவு தான் வரும் எனக்கு அவர்களை எனது அம்மாவாக நினைத்து பார்த்தேன். என்றும்மறக்க முடியாது அம்மாவை.
“அம்மா இல்லையென்றால் எல்லாம் சும்மா தான்.”
நன்றி
இனிய காலை வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
எங்கள் வீட்டில் நடந்த முதல் இறப்பு “எங்கள்ஆச்சி”அப்போது நாங்கள் சிறுவர்கள்
எல்லோரும் அழுதார்கள் நாங்களும் அழுதோம்.
அதன்பின் நடந்த என் அம்மாவின் இழப்புத்தான் எங்கள் மனதை உலுக்கி இன்றும் என் மனதை விட்டு
நீங்காத நினைவு.1969ம் ஆண்டு.புரட்டாசி மாதம்
6ம் திகதி காலை எழுந்ததில் இருந்து அம்மா தொடர்ந்து இருமலால் சோர்ந்து போய்
அம்மம்மாவிடம் என்னால் முடியவில்லை ,நான் படுக்கப்போறேன் என்று கூறினார்.கூடத்தில் பாய்விரித்து அம்மாவைப்
படுக்க வைத்தோம்.அம்மாவின்
நிலமை அம்மம்மாவுக்கு புரிந்து விட்டது. வேக வேகமாக மூச்சுவிட்ட அம்மாவின் இறுதி நேரம் என்று.எல்லோரும் கூடி நின்றுசெபித்துக்கொண்டிருக்க.அம்மாவின் கண்கள்
மெதுவாகமூடிக்ககொண்டதுக்பிள்ளைகள் நாங்கள்அலறி அழ ,மூடிய அம்மாவின் கண்கள் மெதுவாக திறக்க பக்கத்தில்இருந்தவர்கள்
அழாதீங்க, அம்மாட உயிரை
நிம்மதியாகப் போக விடுங்க என்று கூற நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க அம்மாவின் திரும்பவும் மூடிக் கொண்டன.இன்னும் என் நெஞ்சில்நீங்காத நினைவாக உள்ளது .நன்றி பாமுகம்.
கண்கள் திரும்பவும் மூடிக் கொண்டன
பெற்றோரே தெய்வம்…
கண்முன் கண்டதும் இன்றும் இது நடந்திருக்குமா என எண்ண வைக்கும் இழப்பு எமது பெரியப்பா ஓலை வீடு வேய்ந்து கொண்டிருந்தவருக்கு ஓலை எடுத்துக் கொண்டிருந்தார் சற்று நேரத்தில் தள்ளாடினார் படுக்க வைத்தனர் எழும்பவே இல்லை.. உறவுகள் வந்து பாதங்களை தொட்டுப் பார்த்து விட்டு குளறினார்கள்.. நம்பமுடியாத நான் பார்த்த முதல் பிரிவு என்றும் என்மனதை நெருடும் பேரிழப்பு. அன்று புரியவில்லை இன்று இதுவே மாரடைப்பு என மனம் ஏற்கிறது.
அன்றைய அவலக்குளறல் ஒலி இன்றும் மனதை உலுக்கும் மறக்க முடியாத மனதின் வலியே.
நன்றி
இனிய காலை வணக்கம்,
பெற்றோரே தெய்வம்,
பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் பல மூத்த உறவுகள் இழந்தமையை பார்த்திருக்கின்றோம்.
பெரியம்மாவின் மூத்த மகன்
சிறு பிள்ளைகளுடன் குடும்பமாக வாழும் காலத்தில்
தன்னைத்தானே அழித்துக்கொண்டமை
நினைத்து ,நினைத்து
பெரியம்மா, அம்மா
கவலைப்படுவதை
பார்த்திருக்கின்றேன்.
சாந்தினி.
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
தாலாட்டுப் பாடி என்னை அம்மா தூங்க வைத்த ஞாபகம்
இல்லை .தம்பி தங்கையரை
தூங்க வைத்தது இன்றும் ஞாபகம் .அம்மா பாடிய தாலாட்டு பாடலைப் பாடி எனது அக்காவின் பிள்ளைகளையும்
எனது பிள்ளைகளயும் நான்
தூங்க வைத்திருக்கிறேன்.
ஆனால் சிறு வயதில் பல கதைகள் சொல்லி தூங்க வைப்பது ஞாபகத்தில் உண்டு.ஞாபகமூட்டியதற்கு
நன்றிகள்.
பெற்றோரே தெய்வம்…
அம்மாவுடன் அனைவரும் ஒன்றாகப் படுத்துறங்கியது ஞாபகம். கதைகள் கூறியதும் நாங்கள் இடைமறித்து குழப்புவதும் பூச்சாண்டி வருகுது சத்தமில்லாமல் படுங்கள் என பயன்படுத்தியும் நித்திரையாக்கி விட்டு நுளம்பு குத்தாமல் ஒவ்வொருவரையும் போர்த்தி விடுவார் அம்மா.
மிக்க நன்றி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-03-2025
எங்கள் வீட்டில் சிறு பிள்ளையாய் இருக்கும் போது எனக்கு தாலாட்டுப் பாடியது ஞாபகமில்லை. தம்பிக்கு பாடும் போது என்னையும் அணைத்து தூங்க வைப்பார்கள். நிறைய கதை சொல்வார்கள். எழும்பியிருந்து கதை கேட்ட ஞாபகமுண்டு, பின்னர் அம்மா நித்திரை போல் நடிப்பார். நானும் நித்திரை போல் நடிக்கலாம் என நினைப்பேன், தூங்கி விடுவேன். ஆராரோ ஆரிவரோ … மாமன் அடித்தானோ
மல்லிகைப் பூ செண்டாலே …பாடல் ஞாபகமுண்டு தம்பியை ஏணையில்ப் போட்டு ஆட்டிய ஞாபமுண்டு. அம்மா சமையலறையில் வேலையாயிருந்தால், அப்பா நிறைய கதை சொல்வார். அண்ணாவும், நானும் அம்மா யாரின் பக்கம் திரும்புவா எனப் போட்டி போடுவம். அம்மா இருவரின் கையையும் பிடித்து தூங்குவா. தம்பியை காலில்ப் போட்டு உறங்க வைப்பா. நானும் காலில்ப் போட்டு உறங்க வைப்பேன். ஞாபகங்களை மீண்டுத் தந்த பாமுகத்திற்கு நன்றி.
பெற்றோரே தெய்வம்
சின்ன வயதில் அம்மம்மா காலை நீட்டி தலையனை வைத்து காலை ஆட்டி தாலாட்டுப் பாடி தூங்க வைப்பா .
தோலில் போட்ட தலையை சாய்த்து தட்டி தாலாட்டுப் பாடல்கள் பாடுவா.அம்மா.
மடியில் போட்டு அனைத்து தட்டி தாலாட்டுப் பாடல் பாடுவது முண்டு.
மாமாவின் சேலையை ஏனை கட்டி அதில் போட்டு, ஆட்டி நித்திரை ஆக்குவார். நானும் மகளை இப்படித்தான் நித்திரை ஆக்குவேன்.
வெளிநாட்டில் மகன் நித்திரை ஆகும்போது அம்மம்மா அம்மாவை நினைத்து உணவு தந்து பிள்ளை மை பார்த்தவர்கள் அவர்கள், எண்ணி அழுவேன் .
இப்போது அழுகை வந்தது.
மிக்க நன்றி.
இனிய வணக்கம்,
பெற்றோரே தெய்வம்.
பிள்ளைப்பருவத்தில்
எப்படி தாலாடினார்கள்
என்பது
எம் நினைவில் இல்லை.
அப்பப்பா மட்டுமே
என் நான்கு வயது வரை
வாழ்ந்த மூத்தபெற்றோர்.
சிறுவயதில்
நித்திரைக்குச் செல்வதற்கு முன்
அம்மா புராணக்கதைகள், திருப்புகழ், கந்தனுபூதி போன்றவற்றைச் சொல்லித்தந்தமை
பசுமரத்தானியாக இன்றும்
எம் மனதில் உள்ளன.
சாந்தினி
இரவில் தூங்க வைக்கும்
தந்திரம்
அம்மா இரவில் படுக்கும் போது நல்ல நல்ல கதைகள் சொல்வார் இப்ப நினைச்சாலும் இனிக்கும் தூக்கவும் வரும் நினைவிலும் இருக்கு அப்படியே படுத்து தூங்கிய நாட்கள்…. இடையில் கேட்கின்றீர்களா அல்லது படுத்து விட்டீர்களா என சத்தம் போடுவார் மறுநாள் மிகுதி கதையை சொல்லுங்கள் அம்மா என கேட்ட நாளும் உண்டு…
சொக்க சொக்கா சோறும் உண்டு சோளநாட்டான் கெடுத்து போட்டான் என்ற கதை நினைவில் இருக்கு….
எங்கள் வீடு சீற்போட்ட வீடு சரியான
வெக்கை அம்மாவுக்கு வேர்த்து ஓழுகும்
ஐயா பனை ஓலையில் கட்டிய விசிறியால் விசுக்குவா
தம்பிமார் சண்டை போடுவாங்கள் அந்த சத்தத்தில் நான் தூங்கி விடுவேன்….
யன்னலை திறந்து விட்டு காத்து வாங்கி படுத்த நாளும் உண்டு கள்ளர் இல்லாத காலம்…அது
(அம்மம்மாவுடன் இருந்த காலம் குறைவு அப்பம்மாவையும் பார்க்கவில்…
நன்றி வணக்கம் 🙏
பெற்றோரே தெய்வம்
என் அம்மா எங்கள நித்திரை ஆக்குவது
தான் நடுவிலும் அம்மாவின் வலப்பக்கத்தில் இருவரும் இடப்பக்கத்தில் இருவருமாக வைத்து நித்திரை ஆக்குவது வழமை.
அப்போ எங்கள் வீடு ஓலை வீடு…
இரவில் சரியான வெக்கையாகத்தான் இருக்கும்…
அப்போ…அம்மா தான் இழைத்த விசிறியினால் விசுக்கித்தான் தன் கை உழையும் வரை விசுக்கி எங்களை நித்திரை ஆக்குவார்.
அம்மாக்கு கை உழைந்து போனதும் விசுக்குவதை நிறுத்தி விடுவார்.
அப்போ எனக்கு மட்டும் நித்திரை வராது.
அப்ப நான் கேட்பேன் அம்மா விசுக்குங்கோ விசுக்குங்கோ என்று.
அம்மாக்கோ முடியாமல் இருக்கும்.
அப்போ அம்மா சொல்லுவார் காத்து இப்போ குட்டான் வீட்ட போட்டுது என்று…வந்ததும் விசுக்கிறேன் என்பார்.
நானும் அம்மா சொன்னா சரிதான் என்று நம்பி கொஞ்ச நேரத்தில நித்திரையாகி விடுவேன்.
இது மாதிரியே தொடர்ந்தது…
எங்களுக்காக வேண்டிய தொட்டிலும்
ஆச்சியின் வெள்ளைச்சேலையினால் கட்டிய ஏணையும் இன்றும் என் கண்களில்……
நினைக்க வைத்த பாமுகத்திற்க்கு கோடி நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽
தர்ஜினி சண்❤️🙏🏽
15.03.2025
பெற்றோரே தெய்வம்
என் அம்மா எங்கள நித்திரை ஆக்குவது
தான் நடுவிலும் அம்மாவின் வலப்பக்கத்தில் இருவரும் இடப்பக்கத்தில் இருவருமாக வைத்து நித்திரை ஆக்குவது வழமை.
அப்போ எங்கள் வீடு ஓலை வீடு…
இரவில் சரியான வெக்கையாகத்தான் இருக்கும்…
அப்போ…அம்மா தான் இழைத்த விசிறியினால் விசுக்கித்தான் தன் கை உழையும் வரை விசுக்கி எங்களை நித்திரை ஆக்குவார்.
அம்மாக்கு கை உழைந்து போனதும் விசுக்குவதை நிறுத்தி விடுவார்.
அப்போ எனக்கு மட்டும் நித்திரை வராது.
அப்ப நான் கேட்பேன் அம்மா விசுக்குங்கோ விசுக்குங்கோ என்று.
அம்மாக்கோ முடியாமல் இருக்கும்.
அப்போ அம்மா சொல்லுவார் காத்து இப்போ குட்டான் வீட்ட போட்டுது என்று…வந்ததும் விசுக்கிறேன் என்பார்.
நானும் அம்மா சொன்னா சரிதான் என்று நம்பி கொஞ்ச நேரத்தில நித்திரையாகி விடுவேன்.
இது மாதிரியே தொடர்ந்தது…
எங்களுக்காக வேண்டிய தொட்டிலும்
ஆச்சியின் வெள்ளைச்சேலையினால் கட்டிய ஏணையும் இன்றும் என் கண்களில்……
நினைக்க வைத்த பாமுகத்திற்க்கு கோடி நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽
தர்ஜினி சண்❤️🙏🏽
15.03.2025
பெற்றோரே தெய்வம் வரிகள்
இரவில் தூங்க வைக்கும் தந்திரங்கள். பாட்டு கதை சொல்லி தூங்க வைப்பார் அம்மா. காகம் நரி கதை.
புறா பாம்புக்கதை இப்படியான கதைகள் சொல்லுவா.
அதிகமாக ஆராரோ ஆரிவரோ
இந்தப் பாடல் இன்றும்
நினைவாக உள்ளது.
என் சகோதரர்களுக்கு பாடியபோது
நானும் சேர்ந்து பாடுவேன். இன்று நினைக்கும்போது
அந்த நாட்களின்
ஆனந்தமாக மறக்க மறக்கமுடியாத நினைவாக உள்ளது
இனிய காலை வணக்கம்
பெற்றோரே தெய்வம்
09-03-2025
எங்கள் வீட்டில் ஆளுமை அதிகாரம் கட்டுப்பாடு எல்லாமே அம்மா தான்.
அப்பா கொழும்பில் கெப்பிட்டல் தியேட்டரில் வேலை, ஊருக்கு வந்தால் அன்பாக எங்களுடன் நேரத்தை செலவளிப்பார்.
பின்னர் நிறைய தோட்டங்கள், வயல்கள் ஆட்களை வைத்தும் செய்து கொண்டிருப்பார். அப்பா, அம்மா இருவருக்கும் நாங்கள் நல்லா படிக்கவேண்டும், நல்ல வேலை செய்ய வேண்டுமென்பது தான் விருப்பு. சிறிய வயதில் ஊரில் படித்த காலத்தில், எனக்கு பரீட்சை என நான்கு மணிக்கு எழும்பினாலும் அம்மா நான்கு மணிக்கே எழும்பி தேநீர் போட்டுத் தருவா. அருகிலிருந்து ஏதாவது பேப்பர்களை அடுக்கிக் கொண்டிருப்பா. அல்லது சமையல் வேலை என தொடங்கி விடுவா. சிறிய வயதில் அம்மா சமைக்கும் போது அருகிலிருந்தால் வாய்பாடு. சொல்லித்தருவா, வாசிக்க விடுவா, ஏதாவது பாடசாலை பற்றி கேள்வி கேட்டு நல்ல தோழி போல் கதைப்பா. இருவரும் எங்களை அடித்தோ, கண்டித்தோ திருத்தவில்லை, அன்பாலும், இப்படி வாழ வேண்டுமெனவும் சொல்லித் தான் திருத்துவார்கள்.
அவர்களிடம் கற்றுக்கொண்டது போல், நானும் தொடர்கின்றேன். பிள்ளைகள் படிக்கும் போது அருகிலிருந்து நானும் ஏதோ கிறுக்கல்கள் செய்வேன். வேலையில்லையென்றால், படுக்கலாம் தானே என்பார்கள். ( இதெல்லாம் என் அம்மா வேறு வேலைகளுடன் என்னைக் கவனித்திருக்கிறா என்பது புரியுது.)
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
ஐயாவின் உழைப்பு ,அம்மாவின் திறமை, இரண்டுமே நான் பார்த்திருக்கிறேன்.
ஐயா தரும் பணத்தில் அம்மா
கணக்குப் பார்த்து செலவு செய்து மீதிப் பணத்தை உண்டியலில போட்டு சேமித்து
வீட்டுத் தேவைகளை கச்சிதமாக செய்து முடிப்பார்.
அதில் ஐயா சந்தோசப் படுவார்.ஐயாவின் கட்டுப் பாட்டில் அம்மாவின் ஆளுமையில்அழகாக நடந்தது நான் கண்ட என் குடும்பம்…
வீட்டுத் தலைவர்களை மதித்து
ஆளுமை கொண்ட பெண்களாக எம் தாய்மார்
இருந்தது பெண்களுக்குப். பெருமையே….
நன்றி.
பெற்றோரே
தெய்வம்
குடும்ப பொறுப்பு அம்மா கையில் தான் எல்லோரையும் வழிநடத்தல் சரியாக செய்வார் ….
ஆளுமை ஐயா விடம்
கட்டுபாடு கண்டிப்பு அத்தனையும் ஐயா தான் செய்வார் …
நிர்வாகம் வழிநடத்தல் அம்மா
பொருளாளர்
அம்மா மிக மிக கச்சிதமாக செய்வார்!
நன்றி
சிவாஜினி சிறிதரன்
இனிய காலை வணக்கம்,
பெற்றோரே தெய்வம்,
எங்கள் பெற்றோருடன்
வாழும் காலத்தில்
பொருளாதார ரீதியில்
பலம் அப்பாவிடமே!!
ஆனால் அதனை கொண்டு குடும்பத்தை நிர்வகித்த திறன் அம்மாவிடம்!!
வீட்டில், வளவில் கிடைக்கின்ற
மா, புளி, இலுப்பை , தென்னை…… போன்ற
வளங்களை பெருக்கி
அவற்றையும் பணமாக்கிய பெருமை
அம்மாவின் கைங்கரியமே!!!
அப்பாவின் தொனி
மேலோங்கி இருந்தமையால்
வெளித்தோற்றத்தில்
அவரே எங்கள் வீட்டின் ஆளுமை.🙏
சாந்தினி துரையரங்கன்.
வணக்கம்
பெற்றோரே தெய்வம் எங்கள் வீட்டில் நிர்வாகப் பொறுப்பில், பிள்ளைகள் வளர்ப்பில் அம்மாவே , ஆற்றலுடன் ஆளுமையுடன், பாசம், நேசப்பகிர்வுடன் கட்டியம் கூறி வாழ்வின் முதன்மை தாயிடமே. நாமும் பொறுப்புள்ள வாழ்வின் பற்றை பார்த்து வளர்ந்திட எம்மையறியாமலே எமக்குள் ஊடுருவியுள்ளது எனலாம். தந்தை தொழில் நிமித்தம் வேறிடம் என்பதால் பெற்றோர் நிர்வாக அதிகாரம் அம்மாவிடமே.
நன்றி
பெற்றோரே தெய்வம்.
அம்மா, அப்பா கார் வைத்திருந்தார். ரொலி எடுத்து நட்டப் பட்டார். கடன் கூட அப்போது தான் அம்மா சீட்டு போட்டு கடனை அடைத்தார்.
நிர்வாகம் தன் கைக்கு வந்தது. வேலையிடத்தில் வீடு கட்ட பணம் கடன் பட்டார் அப்பா. அவரின் வருமானம் மாதமாதம் கழித்து விடுவார்கள்.
அம்மா பால்,தேங்காய், மாங்காய் மற்றும் கிடுகுபின்னி விற்று
வீட்டு வீட்டு நிர்வாகம் பாத்தார். முக்கிய தேவைகளையும் செய்தார் . சாப்பாடை தவித்து மற்றையதை பாத்து செய்வதும் சிறப்பு. சிறுதுளி சேமிப்பும் முண்டு. இவற்றை பாத்து வியந்ததும் உண்டு.
எங்களுக்கு கூறுவா உழைப்பில் முதல் உணவு அத்தியாவசிய தேவைகள் பயணம் பின்னர் மிச்சம் மிச்சம் கொஞ்சம் பிடிக்க வேனும் கடன் படக்கூடாது என்று கூறுவார். எத்தனை படங்கள் கெக்கன் சோ படம் பாக்க கூட்டி சென்றார்கள் காரணம் பெண் பிள்ளைகள் என்று.
கோவில் திருவிழா , கீரிமலை குளிக்க மறக்க முடியாத அனுபவங்கள்.
நாம் 50% தான் அப்படி வாழமுடிகிறது. கடன் இல்லாமல் வாழ்வதை எண்ணி மகிழ்கிறேன்.
பெற்றோரை எப்போதும் எண்ணி பெருமை கொள்கிறேன்.
நினைவு கூர்ந்த மைக்கு நன்றி.
அவற்றை கேட்டு மகிழ்ச்சி ஒருபுறம், மறுபுறம் கவலையும் படுவதுண்டு .
வணக்கம்
“பெற்றோரே தெய்வம்”
எனது பாடசாலை நாட்களில்
புத்தகம் கொப்பிகளுக்கு உறை போட்ட ஞாபகம்
இன்னும் பசுமையாக
என் மனதில்
கடைகளில்உறை போடுவதற்க்கென பேப்பர்கள் விற்பனையி்ல்இருந்தது்
வாங்கிபோடுவோம்
சீமேந்து வரும் பேப்பரிலும்போட் டிருக்கிறேன்.வேப்ப மரத்தில்
பட்டை சீவி வடிந்திருக்கும்
பிசினால் ஒட்டியிருக்க்கிறேன்
சிறிய வெள்ளைப் பேப்பரில்
பெயர் எழுதி முன்பகுதியில்
ஒட்டுவோம். நன்றி்.
“பெற்றோரே தெய்வம்”
பாடசாலை தொடங்கப் போகிறது என்று புத்தகம் கொப்பிகளுக்கு உறை போட்டு அதற்கு மேல் வெள்ளை நிறத்தில் ஒட்டி பெயர் எத்தினையாம் வகுப்பு என்று எழுதுவதும் அழகே. மற்றவர்களுக்கும் செய்து கொடுப்பதும் பிடிக்கும்.நானும் மயில் இறகை புத்தகத்திற்குள் வைத்து விட்டு ஒவ்வொரு நாளும் பார்த்து ஏமாந்ததுதான். இரவில் படிக்கும் போது அம்புலிமாமா புத்தகம் வைத்து கதை வாசிப்பேன், அம்மா வரும்போது கொப்பிக்குக் கீழ் வைத்துவிடுவேன்.பயம்தான்.
றாஜினி.அல்போன்ஸ்
பெற்றோரே தெய்வம்….
அன்று சிறு வயது பள்ளிக்காலங்களில்…
சிறிவயதில் அம்மா தான் கொப்பிகளுக்கு அழகாய் உறை போட்டுத்தருவார்.
அந்த உறை அப்பா சவுதியில் இருந்து பொருட்களுடன் பெட்டி அனுப்புவார்.
அதனுள் மிக அழகான காட்சி படங்கள் உள்ள கலண்டர் அதையும் அதனுள் வைத்து அனுப்புவார்.
அதனைத்தான் அம்மா எங்கள் கொப்பிகளுக்கு உறை போட்டுத்தருவார்.
அப்போ எனக்கு அது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
கல்வியங்காட்டில் ஆடியபாதம் வீதியில் படக்கடை பலா அண்ணா இவருடைய கடை நாங்கள் இருந்த வீட்டிற்கு எதிரே…
அவரிடம் தான் எங்களுக்கு தேவையான கொப்பி,பிறவுண் உறை,குட்டிக்குட்டி ஸ்ரிக்கர் எல்லாம் வேண்டி மிக அழகாய் ஒட்டி எங்கள் கொப்பிகளை அழகு பார்ப்போம்.
இன்றும் கூட என்னிடம் என் சிறு வயது கொப்பியின்
முன் மட்டை ஒன்றை வைத்து பாதுகாத்து வருகிறேன்.
நானும் மயிலிறகு குட்டி போடும் எனவும் அதற்க்கு வாசமான பவுடர் கொஞ்சம் தூவி தினம் தினம் தொட்டுப்பார்க்கவும் தவறமாட்டேன்.
நினைவுகளை மீட்டிப்பார்த்திலும் மிக மனம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி பாமுகம்…
நன்றி
தர்ஜினி சண்
02.03.2025
02/03 ஞாயிறு :
“சமூக ஒருங்கிசைவை வலியுறுத்தும் ஆண்டு 2025” :
“மூத்தோர் மாண்பு போற்றும் சிறப்பு மாதம் மார்ச் 2025” :
Fatvtamil.com
“பெற்றோரே தெய்வம்”
அன்று சிறு வயது பள்ளி காலங்களில்..
பள்ளி பாட புத்தகம் கொப்பிகளுக்கு, உறை போட்டு அழகு பார்த்த விதங்கள்…
அதற்குள் மயில் இறகு வைத்து குட்டி போடும் என எண்ணி ஏமாந்ததும்…
மர இலை போன்ற இன்னும் பல வித விதமான விடயங்களை செய்த அன்றைய நினைவுகள்…!
[ பெற்றோருடன் வாழ்ந்த காலங்களூடாக, அவர்களை நன்றியோடூ உயிரூட்டுவோம்…]
பாராட்டுகள்
“பெற்றோரே தெய்வம்”
அன்று சிறு வயது பள்ளி காலங்களில்..
பள்ளி பாட புத்தகம் கொப்பிகளுக்கு, உறை போட்டு அழகு பார்த்த விதங்கள்…
அதற்குள் மயில் இறகு வைத்து குட்டி போடும் என எண்ணி ஏமாந்ததும்…
மர இலை போன்ற இன்னும் பல வித விதமான விடயங்களை செய்த அன்றைய நினைவுகள்…!
இனிய காலை வணக்கம்,
பெற்றோரே தெய்வம்
பள்ளிக்காலங்களில்
ஒவ்வொரு
புதிய வகுப்புகள் ஆரம்பங்களில்
எங்கள் கொப்பி, புத்தகங்களின் அழகோ தனி அழகு.
சீமெந்து வரும் பைகள்,
மெழுகு , உறைபோடுவதற்கு என விற்கப்படும் பேப்பர்
எத்தனையோ உறைகள்…
அப்பா வாங்கித்தந்த உறைகள்.
தங்கம் மச்சாள் பசை காய்ச்சி உறைகளை அழகாக
போட்டுத்தருவார்.
தலையணைக்கு கீழ்
அடுக்கி வைத்த காலம்
என்றும் எம் நினைவில்
சமயப்புத்தகத்திற்குள் மயில் இறகுகள்,
அரசம்இலைகள்,
இன்னொரு வகை இலைகள் என
கொப்பிகளுக்குள் வைத்து பாதுகாத்தமை
ஏராளம்…..