பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அடையாளம்

ஜெயா நடேசன்

வியாழன் கவிதை நேரம்-20.06.2024
கவி இலக்கம்-Jeya Nadesan
“அடையாளம்”
—/——/—-
அக்கரை பச்சையென்று
அக்கரையில் இருந்து வந்தோம்
அகதி என்ற போர்வையிலே அத்தனையும் இழந்து வந்தோம்
தமிழன் பெயர் மாறி போர்வையிலே
அடையாளமே தொலைத்து நின்றோம்
உயிரைக் காக்கவென்று
அக்கரையை தேடி வந்தோம்
இக்கரைக்கு வந்த பின்னே
அக்கரையில் அருமையை உணர்ந்தோம்
உயிர் தந்த தாய் மண்ணை
அடையாளம் தொலைத்து நின்றோம்
தமிழர் பண்பாடு தொலைத்து
நெற்றியிலே பொட்டு இழந்து
பெயர்களிலே மாற்றம் பெற்று
வாயாலே சொல்ல முடியாத நாமங்களாக
அடையாளம் தொலைத்த தமிழ் இனங்கள்
எம் இனங்கள் தந்த சுகம்
பண்பாட்டு விழுமியங்கள் தொலைத்து நிற்குறோம்
ஜெயா நடேசன்
வியாழன் கவிதை நேரத்திற்காய்

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading