மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம்-163. 17.02.2022
“ உருமாறும் புதிய கோலங்கள்”

காலத்தின் கோலத்தில் கருமாறி
உருமாறும் புதிய கோலங்கள்
பூத்திருக்கும் பற்பல வண்ணங்களில்
படர்ந்திருக்கு பந்தலிட்டு

உள்ளங்கள் உருமாறி
உள்ளொன்றும் புறமொன்றும்
உதிர்க்கும் வாய்ச்சொல்
வடுவாகி ரணமாகி வாட்டுதிங்கே

பாதைகளும் பயணங்களும்
பணி வழித் தடங்களும்
தடம்மாறி இடம்மாறி
தடுமாறி தவிக்கிறது

உற்பத்தி நிலைமாறி
விலைவாசி படியேறி
பருவகாலம் சதியாகி
பயணிக்குதே தடுமாறி

பட்டங்களும் சட்டங்களும்
இணையவழி இடம்மாறி
வாழ்க்கையிடம் வாததர்க்கம்
சாதனைகள் வேதனையே

உயர்ந்தோர் தாழ்வதும்
தாழ்ந்தோர் உயர்வதும்
தரணியின் நியதியென்பார்
தடைக்கல்லும் படிக்கல்லாய்

கருமாறி உருமாறி
நிறம்மாறும் மனிதர்கள்
வாழ்க்கையின் நியதியா
வாழ்வைஅழிக்கும் சதியா

நன்றி வணக்கம்🙏
அதிபர்..சகோதரி கலைவாணி மோகன்
அவர்களுக்கும்…,
அனைத்து கவிகளையும் … அழகாக
தட்டிக்கொடுக்கும்
சகோதரி நகுலா அவர்களுக்கும் ..
சிவதர்சினி அவர்களுக்கும்..
என்மனமார்ந்த நன்நன்றிகள்🙏💖

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading