இராசையா கௌரிபாலா

பரவசம்
————

பழகிப் பார்க்கப் பருவங்கள் பரவசம்
சுழலும் பூமிதனில் சுற்றிடப் பரவசம்
நிழலும் தொடருதே நிசத்தின் பரவசம்
மழலை மொழியில் மயங்கிடும் பரவசம்

பூக்கள் எல்லாம் புலர்ந்திடப் பரவசம்
ஏக்கம் தொலைந்த இரவும் பரவசம்
ஆக்கம் ஊக்கம் அளித்திடும் பரவசம்
பாக்கள் இனித்திடும் புரிதலில் பரவசம்

எல்லாம் பரவசம் எதிலும் பரவசம்
நல்லவராய் அவனியில் நாளும் பரவசம்
வல்லமை தந்து வானுயரப் பரவசம்
இல்லாப் பிறப்பை இனிதாக்கும் பரவசமே.

இராசையா கௌரிபாலா.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading