மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

இரா.விஜயகௌரி

சுதந்திரமாமே…………

சுந்தர எழிலாய் சிறகு விரித்து
எல்லைகள் இல்லா தடங்களைத் தொட்டு
காற்றின் அணுக்களில் காவியம் படைத்து
வெற்றி கொள்வதே சுதந்திர மாண்பு

கொடுப்பதும்பெறுவதும் பறிப்பதும்-பின்
அடக்கியும் அடங்கியும் முடங்கியும்
முனகித்தவித்தலைவதும். இவைதாம்
அடிமைத்தளையின் ஆணவப்பிடியோ

எனக்கென உள்ள உரிமைகள் தம்மை
நானே உணர்ந்து நானிலம் தொடுகின்
தடைகளை இடவும் தாண்டிட விளைவதும்
சுதந்திரச்சிறகுகள் அரிவதன் நிலையோ

உணர்ச்சிப் பிழம்பில்உழல்வது அல்ல
உலகின் பரப்பினைஉள்வாங்கி எழுவதும்
வேரிடம் தொட்டு விரிந்து வாழ்வதும்
எண்ணம் விரிய ஏற்றம் படைப்பதும்
சுதந்திரச் சிறகதன் செறிவே என்பேன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading