மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஒளவை

குரு பார்வை….
*******************
குருவுக்கு அடுத்தே
……கடவுளை வணங்கும்
பெருமை கொண்ட
…… பண்பினை ஊட்டி
கருவான நாள்முதல்
……கல்வியின் சிறப்பை
உருவாக்கி வளர்த்தது
……அறிவார்ந்த எம்மினம்

அறிவில் சிறந்து
…..அவனியில் உலவ
நெறிமுறை வகுத்து
…..நேர்மையான வழிகளைக்
குருகுலக் கல்வியில்
….. குறையின்றித் தந்து
பெருமையாய் வித்தைகள்
…..பெற்றிட வைத்தனர்

குருவின் ஆசி
….. கிடைக்காது போயின்
உருவான வித்தையும்
….. உதவாமல் போகும்
அருள்தரும் குருவின்
….. அன்பான பார்வையில்
வருங்காலம் எல்லாம்
….. வசந்தமே சேரும்

தரமான குருவால்
…..தரப்படும் கல்வி
உரமாக என்றும்
….. உன்னை உயர்த்தும்
சிரம்மீது இதனைத்
….. தெளிவாகக் கொண்டால்
வரலாற்றில் நிலைத்து
…..வளமாக வாழ்வாய்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading