” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒளவை

பூமித்தாய்
…………………
அழகிய பூமியில்
அனைத்துமே அழகு
பழகிடும் தன்மையில்
பாசத்தைக் காட்டும்
வழங்குதே இன்பங்கள்
வள்ளலாய் எமக்கு
இழந்திட வேண்டாம்
இன்னல்கள் புரிந்து

மண்ணிற்கும் மனது
மறைவாய் உண்டு
எண்ணத்தைப் புரிந்தால்
ஏற்றங்கள் தருமே
கண்ணாய் நம்மைக்
காத்திடும் பூமியை
பண்பாய் நடத்திப்
பெருமை கொள்வோம்

வானும் நிலவும்
வளியும் நமக்கு
வாரி வழங்கி
வசந்தம் பெருக்க
ஈனப் பிறப்பாய்
இருக்கும் நாமோ
மானங் கெட்டு
மறந்தோம் அன்பை

காலம் என்றும்
கடமையைச் செய்யும்
ஞாலம் நம்மை
நட்பாய் அணைக்கும்
வாதம் புரிதல்
வன்மம் அன்றோ
பாதம் பணிந்தால்
பாரில் இன்பமே.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan