க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 230

தலையீடு

இறப்பு எப்படி நடந்தது?
இறந்தவர் யார்?
உறவு முறை என்ன?
யார் பொறுப்பு?
கேள்வி கொத்ததை
நிரப்பியவளுக்கு

உதவிகள் எங்காவது
பெறலாமா என்ற கேள்விக்கு
அனுதாபத்துடன் பதில் தந்தாள்

சவப்பெட்டி என்ன மாதிரியேன
கேள்வி வந்த போது
பார்வையிட்டவர்கள்
சப்புப் பலகை
ஊர் உலகம் ஏற்குமா?

எரிப்பதில் பெறுமதி
என்ன இருக்கின்றது
கேட்டவளுக்கு

அன்பைக் காட்ட
பெறுமதி தேவை!!..
தலையீட்டினால் தகர்ந்தது
அனுதாப அலைகள்!

தலையீடுகளால் தவிடுபொடியாகும்
காரியங்களில்
இதுவும் ஒன்று!!!!…….

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading