” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“பூத்திட்ட புத்தாண்டிலே”

நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)

அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க

இன்பத்தமிழாலே எளியதொரு கவி எழுதி
துன்பமெல்லாம் அகன்றோட
தூயதோர் யுகம் படைப்போம்

உண்மை அன்பு நீதியென
நாடெல்லாம் நயந்து நிற்க
மென்மை எனும் மாண்பு
தரணியெங்கும் நிறைந்திருக்க

மதங்கள் சிறப்புடனே
மாநிலத்தில் வளர்ந்திருக்க
ஓதுகின்ற ஓசையெல்லாம்
மனிதம் மலர வேண்டுமென்றே

தம் சமயம் பேணி வாழும்
நிலை உலவ வேண்டும்
உண்மையுடன் பிறர் சமயம்
மதித்து நிற்க வேண்டும்

மனித நேயப் பண்பு
மனங்களிலே இலங்க
புனிதமொடு புது வாழ்வை
புத்தாண்டில் தொடங்குவோம்….
நன்றி———

Author: