மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பெற்றோரே!
(வெண்கலிப்பா)
தூய்மையான அன்பினிலே தாய்தந்தை விஞ்சியவர்
ஆய்வறிந்து பார்த்தாலே ஆருளரோ? அவனியிலே
பத்துமாதம் சுமந்தவளும் பக்குவமாய் வளர்த்தவளும்
சொத்துசுகம் சேர்ப்பதற்கு சோர்விலாதே உழைத்தவரும்
இன்னாரின் பிள்ளைகள்தான் இவர்களென இவ்வுலகம்
நன்றாக அறிவதற்கு நாளெல்லாம் உழைத்தவர்கள்
அன்னைதந்தை இருவருமே அயராதே உழைத்தவர்கள்
என்றுமேஎம் உள்ளத்தில் ஏற்றிடுவோம் சுடர்ஒளியாய்
மிளிர்ந்துகொண்டே இருப்பார்கள் மேதினியில் தெய்வங்கள்
ஒளிதந்த சூரியனும் ஒப்பற்ற சந்திரனும்
எம்வாழ்வாம் வானத்தை எழிலாக மாற்றியவர்
தம்வாழ்வை அர்ப்பணித்தே தன்னலமும் பாராது
தம்கடமை என்றேதான் தாய்தந்தை இருந்தாரே
அம்மாவின் ஐயாவின் அளவில்லா அன்புக்கு
எம்மாத்தி ரநன்றிதனை என்னுள்ளம் சொல்லிடுமோ
ஏங்குகிறேன் இன்னமும்தான் என்முன்னே வந்திட்டால்
தூங்கவைப்பேன் இருவரையும் தூளியிலே உறங்குகின்ற
பாலகராய்ப் பார்த்திடுவேன் பக்குவமாய்ப் பசிதீர்ப்பேன்
தாலாட்டும் பாடிடுவேன் தான்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading