மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 167 ]
“பணி”

தன்னுயிர்போல் மன்னுயிரிடமும் காட்டும் கருணை
பொதுப்பணியில் நிறைவுகாணும் உள்ளத்தகமை
என்கடன் பணிசெய்து கிடப்பதே எனும் இலட்சியம்
தன் பணியில் என்றும் குன்றா உற்சாகம்
ஆவி பொருள் தன்னலம் தனை தியாகம் செய்யும் வைராக்கியம்
பொதுநல சேவையில் பெறும் முழு இன்பம்
பொய்மையில்லாச் செயற்பாட்டில் இணைந்த இதயம்
யாவுமுயர் பணியினால் சான்றோர் அடையும் பூரணம்
சமயகுரவர்பெற்ற பேறு இறைபணியினால் வந்ததன்றோ ?
பொதுப்பணிக்கே அர்ப்பணித்த அன்னை தெரேசா
மருத்துவமாது புளோரன்ஸ் நைற்றிங்கேல் தாதியர் திலகம்
சைவமும் தமிழும் இருகண்ணென போற்றிய நாவலர்
எத்தனை சான்றோர் எத்தனை துணைகள் எத்தனை பணிகள்
இன்றும் போற்றும் அவர் நாமம் எளிதே சாற்றுதல் அரிதாம்

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading