மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 208 ]
“விருப்பு”

எண்ணிலடங்கா விருப்புகள் நிறைந்ததே மனமெனுங் களஞ்சியம்
நல்லவை தீயவை எவையெனக்காட்டுமே விளைவுகள் அனுபவம்
விருப்புகள் தோற்றால் நெஞ்சில் உருவாகுமே பெருஞ்சினம்
வென்று விட்டாலும் திருப்தியடையாத பேராசைகொண்ட அடிமனம்

வெறுப்புக்கும் பேராசைக்கும் இடையில்தவிப்பதே மனித வாழ்க்கை
விதை சீராயின் விளைச்சலும் மேலாகும்,விருப்பு நன்றாயின் விளைவும் மேன்மைபெறும்
பெறமுடிந்ததை விருப்பில் கொள்ளல் விவேகம் சாதிக்கும் விருப்பானால் மனதில் உறுதி கொள்.
நன்மை பயக்கும் நல்விருப்புக்கள் கனவிலும் நனவினும் சுமந்து செல்.

தீயவை என்றுமே தீமைபயப்பவை நல்லவை நன்மையே விளைவிப்பவை
ஆன்றோர் அறிவுரையும் எம்மதக்கோட்பாடும் என்றும் புகட்டும் நல்விருப்பை
எண்ணம் போலவே எல்லாம் நடந்தால் இறைவன் இல்லையடா!
தீய வழியில் திரவியம் கிடைத்தாலும் மனம் திருப்தி அடையாதடா!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading