மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 17-02-2022
ஆக்கம் – 32
உருமாறும் புதிய கோலங்கள்

சுற்றும் உலகத்தையே
தலைசுற்ற வைக்கின்றது
உருமாறி உருமாறி உருக்கொள்ளும்
கொரொணோவின் புதிய கோலங்கள்
குடுகுடுப்பைக்காரனாய் கூவும் [WHO]
கூவிகின்றது நல்லகாலம் பிறக்குதென்று

காலநிலைமாற்றத்தின் புதிய கோலங்கள்
உலகமெங்கும் இயற்க்கையின் சீற்றங்கள்
வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியே போகின்றது
பாலைவனத்திலும் பனிமழை பொழிகின்றது
பனிப்பாறைகளும் உருகியே கரைகின்றது

முட்டையிலிருந்து கோழிவந்ததா
கோழியிலிருந்து முட்டைவந்ததா
இன்றுவரை விடையில்லை-ஆனால்
நெகிழி [PLASTIC] முட்டையும்
களவாச் சந்தையில் விற்பனைக்கு
குப்பையில் உணவை கொட்டிய பாவம்
நெகிழி [PLASTIC] அரிசியும் விற்பனையாகுது
ஏமாற்று உலகத்தின் கோலங்கள்

உக்ரைனில் உக்கிர போர்க்கோலங்கள்
வல்லாதிக்க ரஷ்யா தன் வல்லமையைக் காட்ட
கூடவே கூடாத சீனாவும்
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்றது
எல்லாமே ஆதிக்க வெறியர்களின்
அகங்காரக் கோலங்கள்

நாலாம் உலகயுத்தம் நடக்குமா
நாடிஜோதிடரையும் காணவில்லை
ஆரூடம் சொல்லும் ஜோதிடரையும் தேடுகின்றோம்
கொரொணோவில் தொலைந்து போனவர்கள்
மதில் மேல் பூனையாய் பதுங்கும் கோலங்கள்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
13-01-2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading