மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 663

தன்னை அறிந்தவன்

வாழ்க்கைப் பயணம் செல்கின்றது அழகாக
நாளும் புதுப்புது அனுபவம் தெளிவாக
வேகத்தடைகள் போடவென சில நிகழும்
கடுமையைக் கடந்துவிட மகிழ்ச்சியில் முற்றும்

போனதும் வந்ததும் இனி வரப்போவதும்
இன்பதுன்பத்தை இரண்டறக் கலந்தே தரும்
இருப்பினும் பூ வாசமாகவே பூக்கின்றது
புரிதலால் புதிதான மதிப்பான வாழ்க்கை

எவ்வாறு பேசுவதென காலந்தாழ்த்தியே கற்றது
மெளனம் நிறைய சந்தர்ப்பங்களில் பாதுகாத்தது
சூழ்நிலையை மாற்றப்போய் பட்டதெல்லாம் அவமானம்
சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவதென முடிவு

அனுபவம் ஒருவரை எப்படியும் மாற்றிவிடும்
சரிந்து விழாமல் வாழவும் தெரிந்தது
வந்து சேர்வதெல்லாம் வந்தே சேரும்
விரும்பிய வாழ்க்கையை தேடியே நகர்வு

பிடிக்காத மனிதர்கள் பலரைச் சந்திப்பு
பிடித்த மனிதர்களுடன் பிடிப்போடு பேச்சு
தன்னையே தான் அறிந்த ஓர்நிலை
சிக்கத்தான் வைத்திடுமா துன்ப வலை

ஜெயம்
14-09-2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading