தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்

அகிலம் எங்கும் எழில் முகம் பெருகிட
இயற்கையின் வார்ப்பு
தண்ணீர் அல்லவா
அறிந்தும் தெரிந்தும் நம்
அலட்சிய போக்கால் கரையும்
தண்ணீரால் மனித வாழ்நாள் குன்றுதே
தண்ணீரின் பவித்திரம் பேனாத கல்வியால்
தொழில்சாலை கழிவுகள்
நிறைந்தே தொடருதே
மாசு பட்ட நீரும் மண்ணின்
வளமும் மனிதனின் ஆயுளை
குறைத்தே நகருதே
தொழில் நுட்ப ஆளுமை
நமக்கு வேண்டும் விழிப்பினை
கையில் விரைந்தே கொண்டு
சூழற்சி முறையில் கழிவுனை
மாற்றி பசுமை உலகை
படைத்திட முயல்வோம்!!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading