” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ்இல் இருந்து.
தலைப்பு : *தீ*

உற்ற பசிக்குஉணவும் ஆக்க உயிர்த்து வருவாயே

ஒற்றைத் திரியில் ஒரு விளக்காகி ஒளியும் தருவாயே

நற்றவர் நடத்தும் வேள்வியில் நீயும் விரும்பிஉறைவாயே

செற்றவர் புரத்தை சிவனார் எரிக்க சேர்ந்து கொண்டாயே

கற்புக் கரசி கண்ணகி அழைக்க கனிந்து வந்தாயே

சிற்ப சிலையாள் சீதா
உயர செந்தணல் வளர்த்தாயே

அற்புதத் தீயே அனலாய் ஏனோ அழிக்கத் துடிக்கின்றாய்

பற்றைக் காட்டையும் படர்ந்து சென்றே பற்றி எரிக்கின்றாய்

உற்றவர் உறங்க குடிலை எரித்து
உயிரைக் குடிக்கின்றாய்

பெற்றவள் வயிற்றில் பெரு நெருப்பூட்டி
பெருமை கொள்கின்றாய்

தீயே தீயே தீண்டாதே
தீமை ஆற்றி திளைக்காதே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading