” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ்இல் இருந்து.
தலைப்பு : *தீ*

உற்ற பசிக்குஉணவும் ஆக்க உயிர்த்து வருவாயே

ஒற்றைத் திரியில் ஒரு விளக்காகி ஒளியும் தருவாயே

நற்றவர் நடத்தும் வேள்வியில் நீயும் விரும்பிஉறைவாயே

செற்றவர் புரத்தை சிவனார் எரிக்க சேர்ந்து கொண்டாயே

கற்புக் கரசி கண்ணகி அழைக்க கனிந்து வந்தாயே

சிற்ப சிலையாள் சீதா
உயர செந்தணல் வளர்த்தாயே

அற்புதத் தீயே அனலாய் ஏனோ அழிக்கத் துடிக்கின்றாய்

பற்றைக் காட்டையும் படர்ந்து சென்றே பற்றி எரிக்கின்றாய்

உற்றவர் உறங்க குடிலை எரித்து
உயிரைக் குடிக்கின்றாய்

பெற்றவள் வயிற்றில் பெரு நெருப்பூட்டி
பெருமை கொள்கின்றாய்

தீயே தீயே தீண்டாதே
தீமை ஆற்றி திளைக்காதே

Nada Mohan
Author: Nada Mohan