பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 271
25/06/2024 செவ்வாய்
“நடிப்பு”
————
திடல் நிறை பெரும் கூட்டம்,
திசையெங்கும் ஒலிபெருக்கி,
திரை இப்போது விலகிற்று..
திடீர் ஆரவாரம் முத்திற்று!!

பெருமையுடன் ஓர் பேரரசர்!
பின்னால் மும் மனைவியர்!
கருங்கூந்தல் மீதில் பெருமுடி!
கணக்கில்லா பல சேனைகள்!

மூத்த மகனுக்கு முடிசூடுவிழா!
முத்து முடியொன்று காட்சிக்கு!
முழுபேர் முகத்திலும் முறுவல்!
முழுமதியென வரும் இளவரசர்!

மகுடி ஓசையொன்று கேட்கிறது!
மனுசி ஒன்று நுழைகிறது!
மனைவி ஒருத்தி குசுகுசுப்பு!
மறுகணமே எல்லாம் பிசுபிசுப்பு!

“தேரில் விரல் வைத்தேனே…
தேடுகிறேன் நான் வரந்தனை!”
தேம்பினார் மன்னர், வரம் ஈந்து!
தேள்குத்தி வீழ்ந்து தனையீந்து!

மூத்தவர் வனவாசம் போகிறார்!
முத்தான மனைவி கூடவே!
முன்பின் திரிந்த இளையவனும்,
முன்னவர் பின்னே தொடரவே!

பார்வையாளர் கண் குளமாக..
பாவியவள்! என்று வாய் திட்ட..
பார்த்த மூத்தவர் சொன்னார்,
“பதறாதீர்! இதுவோர் நடிப்பு!”
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading