மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 271
25/06/2024 செவ்வாய்
“நடிப்பு”
————
திடல் நிறை பெரும் கூட்டம்,
திசையெங்கும் ஒலிபெருக்கி,
திரை இப்போது விலகிற்று..
திடீர் ஆரவாரம் முத்திற்று!!

பெருமையுடன் ஓர் பேரரசர்!
பின்னால் மும் மனைவியர்!
கருங்கூந்தல் மீதில் பெருமுடி!
கணக்கில்லா பல சேனைகள்!

மூத்த மகனுக்கு முடிசூடுவிழா!
முத்து முடியொன்று காட்சிக்கு!
முழுபேர் முகத்திலும் முறுவல்!
முழுமதியென வரும் இளவரசர்!

மகுடி ஓசையொன்று கேட்கிறது!
மனுசி ஒன்று நுழைகிறது!
மனைவி ஒருத்தி குசுகுசுப்பு!
மறுகணமே எல்லாம் பிசுபிசுப்பு!

“தேரில் விரல் வைத்தேனே…
தேடுகிறேன் நான் வரந்தனை!”
தேம்பினார் மன்னர், வரம் ஈந்து!
தேள்குத்தி வீழ்ந்து தனையீந்து!

மூத்தவர் வனவாசம் போகிறார்!
முத்தான மனைவி கூடவே!
முன்பின் திரிந்த இளையவனும்,
முன்னவர் பின்னே தொடரவே!

பார்வையாளர் கண் குளமாக..
பாவியவள்! என்று வாய் திட்ட..
பார்த்த மூத்தவர் சொன்னார்,
“பதறாதீர்! இதுவோர் நடிப்பு!”
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading