மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

விக்னேஷ்வரன் அர்ச்சனா.

என்னுள் உன் காதல்

பொழுது சாயும்
பொழுதில்
கிணற்றோரம் ஒர்
உருவம்.

சற்று விரைந்து
சென்று
பார்த்த போது
மன ஏக்கம் என்னில்.

நீரில் நெளிந்து
செல்வது போன்ற
வட்ட நிலவும் போல
உனது முகம்.

வியந்து பின்சடை
பார்க்கின்றேன்.

காற்றில் ஆடும்
மரங்களுக்கு நடுவில்
தெரியும் நிலவு.
அதனுள் பாட்டி.

கதிரவன் மறைந்து
நடுநிசி வேளையில்
உன் நினைவு
என்னை கொல்லுதே!

குளிர் நீரை உடலில்
ஊற்றும் போது
ஏற்படும் புல்லரிப்பை போன்று

உனது நினைவும் என்னுள்
குளிர் நீரை ஊற்றுகின்றதடா
என் காதலா!

வரி : விக்னேஷ்வரன் அர்ச்சனா.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading