இதுவும் இடரானதே…

வசந்தா ஜெகதீசன்
இதுவும் இடரானதே…
வாழ்வியல் வனப்பின் இயற்கை வரம்
வசந்தமாய் சுகந்தமாய் இதமும் தரும்
காலத்தின் கணதியில் கலந்த இடர்
மழையின் பொழிவாய் மண்ணில் வெள்ளம்
வாழ்வின் இடராய் வந்ததே அவலம்
உயிர்கள் இழப்பும் உடமை அழிவும்
வாழ்விடமற்ற வலியின் துயரும்
தேடற்கரிய தேவை ஆதாரங்களும்
தொலைந்து போனதே இயற்கை இடரில்
பயிர்கள் அழிவும் படரும் வாழ்வும்
நிலைப்பட நாட்கள் நீண்டதாய் தேவை
மீண்டும் மிடுக்குடன் எழுந்திட உதவும் ஆதாரம்
உயிர்கள் வாழ நீங்கள் காட்டும்
கருணையின் நேயம்
மனிதத்தின்மகுடம்நன்றி

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading