இரா.விஜயகௌரி

நிலை மாறும் பசுமை……….

பசுமையும் பயிர்களும் வளம் கொழிக்க
உயிர்களும் உயிர்ப்பும் வசமாகும்
நிலை தடுமாறும் மனிதர்களால் இன்று
வசந்தம் கானலின் ஊற்றாச் சே

இயற்கையும் இயல்பும் கைகோர்க்க
இங்கித வாழ்வில் எழில் கொஞ்சும்
இணையா நெறிமுறை பிறழ்ந்ததனால்
சூழலும் சுற்றமும் பாழாச்சு பரிதவிப்பாச்சு

புழுவும் பூச்சியும் சொந்தம் கொள்ள
நிதம் வானவில் எழிலுடன் எழும் மலர்கள்
செழிப்பின் சேமிப்பை உணர்த்தி எழும்
அழகை தொலைத்து நாம் நிலை குலைதந்தோம்

பசுமையின் புரட்சி வெடித்தெழட்டும்
பசுந்தரை யாவும் செழுமை கொஞ்ச
வாழும் வாழ்வே வரமாகும் அங்கு
உடல் உள நலங்கள் பலமாகும்

வசப்படும் பசுமையை வளப்படுத்தி அந்த
வரத்தின் செழுமையுள் வாழ்வு வெல்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading