இலையுதிர் காலம்

கெங்கா ஸ்ரான்லி

ஈரலிப்பான நிலம்
காய்ந்த சருகுகள்
பழுத்த இலைகள்
மனம் பழுத்ததுபோல
பொன்னிற அழகு
பூமியெங்கும் அமர்வு
மரத்தில் வெறுமை
மனத்திலும் வெறுமை
கார்முகில் கூட்டம்
கலையாத கனவு
காலை விடியல்
மாலை கார்முகில்
ஒளியில்லா மரங்கள்
ஓடாத பாடாத தென்றல்
மின்விளக்கின் ஒளி
மிதக்கும் பல சிந்தனை
இலையுதிர் காலம்போல்
உதிர்க்கும் நினைவுகள்
மனமோ பழுத்த சருகாகி
மண்ணில் விழுகின்றன!

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading