மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

உதிர்க்கின்ற இலைகளே

ஜெயம் தங்கராஜா

கவி 745

உதிர்க்கின்ற இலைகளே

மரத்தோடும் கிளையோடும் இணைந்தே வாழ்ந்தீர்கள்
வரவாக்கி வசந்தத்தை இயற்கையுடன் மகிழ்ந்தீர்கள்
கனிகள் ஒளித்துவிளையாடிய மறைவிடம் நீங்களல்லவா
துணிவோடு இலைகளிற்கிடையில் பூத்தன பூக்களல்லவா

பச்சயத்தை தயாரித்து பச்சையழகு எங்கும்
உச்சிவெய்யிலடிக்கையிலே உயிரினங்கள் உன்னடியில் தங்கும்
தூய்மையான காற்றினை சுவாசிக்க தந்துவிட்டு
ஓய்வெடுக்கும் வேளையென வீழ்ந்தீரோ கிளையைவிட்டு
மரங்களின் இழிசெயல் இலைகளை உதிர்ப்பது
உறவாக்கி கைவிடுவது அஃறினையெனினும் கொடியது
குப்பையெனும் பெயரில் பொன்னிலைகள் பாய்விரிப்பு
தப்பைச்செய்துவிட்டு மரங்கள் மொட்டையாக பரிதவிப்பு

இன்னும் சிலநாள் கிளையில் இருந்திருக்கலாம்
கண்ணுக்கு பசுமையூட்டி பின்னர் விழுந்திருக்கலாம்
பேரழகின் தோற்றமாக இலைகளது மாட்சி
பேரழிவின் மாற்றமாக இலையுதிர்வின் காட்சி

ஜெயம்
17-10-2024

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading