ஒளவை

குரு பார்வை….
*******************
குருவுக்கு அடுத்தே
……கடவுளை வணங்கும்
பெருமை கொண்ட
…… பண்பினை ஊட்டி
கருவான நாள்முதல்
……கல்வியின் சிறப்பை
உருவாக்கி வளர்த்தது
……அறிவார்ந்த எம்மினம்

அறிவில் சிறந்து
…..அவனியில் உலவ
நெறிமுறை வகுத்து
…..நேர்மையான வழிகளைக்
குருகுலக் கல்வியில்
….. குறையின்றித் தந்து
பெருமையாய் வித்தைகள்
…..பெற்றிட வைத்தனர்

குருவின் ஆசி
….. கிடைக்காது போயின்
உருவான வித்தையும்
….. உதவாமல் போகும்
அருள்தரும் குருவின்
….. அன்பான பார்வையில்
வருங்காலம் எல்லாம்
….. வசந்தமே சேரும்

தரமான குருவால்
…..தரப்படும் கல்வி
உரமாக என்றும்
….. உன்னை உயர்த்தும்
சிரம்மீது இதனைத்
….. தெளிவாகக் கொண்டால்
வரலாற்றில் நிலைத்து
…..வளமாக வாழ்வாய்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading