மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கஞ்சா போதை……….

இரா.விஜயகௌரி

அஞ்சா நெஞ்சம் கொண்டலையும்
கஞ்சா போதையின் உள் நுழைவில்
விஞ்சிம் உந்தன் மேன்மைகளை
கொஞ்சமும் எண்ணா கஞ்சன் நீ

பஞ்சமும் பசியும் தலை விரிக்க
கொஞ்சும் மழலையும் பரிதவிக்க
கஞ்சா உந்தனின் தேடலிலே -நீ
தஞ்சமாய் தளர்ந்து நிலை குலைந்தாய்

அஞ்சுகம் அவளது அன்புனக்கு
கொஞ்சமும் நினைவில் எழவில்லை -உன்
கஞ்சா போதையின் ஏக்கம் மட்டும்
நிலைதடுமாறி கழிவரக்கம் தொலைத்த மகனாய் நீ

எஞ்சிய நாட்கள் கேள்வியிட
ஏதிலியாய் நீ பரிதவிக்க -தினம்
நாணிடும் பொழுதுகள் புள்ளியிட
கஞ்சா உனது காதலியோ

அழிவினை நீயே எழுதுகிறாய்
ஆக்கத்தின் நொடிகளை குழிபுதைத்தாய்
நாணிடும் செயல்களை உனதாக்கி
ஓடுவதெல்லாம் கஞ்சா போதைதனைத் தேடி

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading