மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கமலா ஜெயபாலன்

தீயில் எரியும் நம் தீவு
எரியுது எரியுது ஏற்றிய பாவம்
புரியுது புரியுது போற்றிய தெய்வம்
எங்கள் கண்ணீர் இட்ட சாபம்
பொங்கும் தீயாய் பரவுது தீவில்
கண்கள் இருந்தும் குருடாய் அலைந்தோம்
கண்ணீர் விட்டோம் கதறிதுடித்தோம்
எண்ணரும் உயிர்கள் இழந்த சோகம்
மனதால் மறையுமா மறக்கவும் முடியுமா
எழில் மிகு எங்கள் இலங்கைத் தீவு
அழிந்து போகுது அன்னியர் வரவால்
அண்ணன் தம்பி ஆட்சி யாலே
விண்,மண்,கடலும் விற்பனை ஆச்சு
எரித்தல் என்பது எமக்குப் புதிதா
எத்தனை முறைகள் இனவெறி தீயில்
எரிந்தன மனைகள் எம்இன உயிர்கள்
ரத்த வெள்ளம் முள்ளி வாய்க்காலில்
செத்தவர் லட்சம் சித்திர வதையில்
மொத்தமாய் சரன் புக முதுகின் பின்பறம்
சுட்டனர் வெறியர் சுதந்திரம் கோர. கட்டிய கண்ணும்அம்மண கோலமும்
கற்பினை சூறை யாடிய கொடுமையும்
எப்படி மறப்போம் இது வெறும் பொறியே
எரியும் தமிழர் எண்ண இக் கொடுமைகள்
எரியும் இலங்கை என்றோ ஒர்நாள்
தீர்ப்பை ,தீர்வை தீயே தரும் பார்
தீவே தமிழர் தீவாய் வரும் பார்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading