மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பள்ளிக்காலம்!
பள்ளிக் கால பரவசமாம் நினைவுகளை
பதியம் போடும் என்னெஞ்சம்!
துள்ளித் திரிந்த துடுக்குகளும்
தூணாய் நின்ற பெருமைகளும்
வெள்ள மென்னும் வீச்சுடனே
வேகங் கொண்டே நமையிழுத்தே
உள்ளம் நிறைந்த உவப்புடனே
உணர்வை ஊஞ்சல் ஆட்டிடுமே!

உரிமை கொண்ட உறவாகி
ஒன்றி நின்ற தோழர்கள்!
விரிச லின்றே ஓரினமாய்
விரிந்து கிடந்த உலகமதாய்!
சிரிப்பே வாழ்வின் பாதையெனச்
சிந்தை நிறைந்த கனவுடனே!
திரிந்த இன்பக் கோலமதைத்
தினமும் மீட்டும் என்னிதயம்!

இறக்கை யின்றே பறந்துவந்தோம்
இன்ப வானில் சிறகடித்தே!
உறக்க முழைப்பை மறந்திருந்தே
உண்மை மனதாய் வாழ்ந்திருந்தோம்!
சிறப்பாம் பள்ளி இளம்பருவம்
சீராய்க் கிடைத்த அருங்காலம்!
மறக்க முடியா நினைவலைகள்
மகிழ்வாய் மனத்தைத் தாலாட்டும்!

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading