கெங்கா ஸ்டான்லி

இன்பம்

உன் மனம் சுத்தமானால்
துன்பமும் இன்பமாக ஒளிரும்.
செம்மையான செயல் இருந்தால்
சீர்மையுடன் சிறப்பும் அமையும்.
உரிமை உள்ளோரை
உதறிவிடுதல் துன்பம்.
வறுமை உள்ளோரை
வரவேற்று உபசரித்தல் இன்பம்.
உள்ளம் உடலினை வேதனை இன்றி
பவித்திரமாக வைத்தல் இன்பம்.
வெள்ளம் போல் நன்மை இன்பம்
குவலயத்தில் வாழ்வில் சுகந்தம் தருமே.
அன்பை வளப்படுத்திக்கொள்
அறிவுடன் அனைத்தும் தேடிவரும்
பண்பை மெச்சி வாழக்கற்றுக்கொள்
மிகையான புகலின்பம் கூடும் வாழ்விலே.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading